Monday, September 24, 2007

நியூயோர்க்கிலுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை

திங்கள் 24-09-2007

நியுயோர்ல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை இந்த வருடம் இறுதிக்குள் முன் வைத்துள்லதாக ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இதன் போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் 62 வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளை இடம் பெறவுள்ள அமர்வில் உரையாற்றவுள்ளார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home