Monday, September 24, 2007

பெற்றோலிய பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் அமெரிக்காவில் அமைச்சர் பௌசி

திங்கள் 24-09-2007

பெற்றோலிய பொருட்களின் விலையை விரைவில் அதிகரிக்க நேரிடும் என பெற்றோலிய மற்றும் கனியவள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பௌசி, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 85 டொலர் வரை அதிகரிக்குமாயின் இலங்கையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலக அரசியல் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது இந்த வருட இறுதியில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை நூறு அமெரிக்க டொலராக உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எண்ணெய் வளம் தொடர்பாக ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே அமைச்சரின் அமெரிக்க விஜயத்தின் நோக்கமாகும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home