ஓமந்தை மேற்கில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி.
திங்கள் 21-05-2007
இன்று காலை 8.14 மணியளவில் ஓமந்தை மேற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சிறீலங்கா இராணுவம் இச்சம்பவமானது இரணை இலுப்பைக்குளம் பகுதியில் காலை 7.15 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை மணலாறு வெலிஓயா முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களின்போது மேலும் இரு படையினர் கொல்லப்ட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை முன்னரங்க சோதனைச்சாவடி இன்று காலை 9.15 மணியளவில் மீளவும் பொதுமக்கள் போக்குவரத்திற்கா திறந்துவிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home