மட்டக்களப்பில் சிறுவன் சுட்டுக்கொலை
ஞாயிறு 23-09-2007
மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது.
தனது நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் செல்வகுமார் ராஜ்குமார் என்றும் சங்கபுரம் 16 ஆம் கொலனியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடனான சடலம் ஒன்றை களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறையினர் இன்று காலை குருமன்வெளிப் பகுதியில் மீட்டுள்ள்னர்.
அது நேற்று காணாமல் போன ஆறுமுகம் முருகன் (வயது 35) என்ற நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home