tag:blogger.com,1999:blog-85154352560780741172024-03-19T05:36:18.516+01:00TamilnewsR. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-32078875638094141032007-09-24T13:10:00.000+01:002007-09-24T13:11:46.131+01:00நியூயோர்க்கிலுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை<span style="font-size:85%;">திங்கள் 24-09-2007<br /></span><br />நியுயோர்ல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை இந்த வருடம் இறுதிக்குள் முன் வைத்துள்லதாக ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இதன் போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகபாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.<br /><br />அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.<br /><br />ஐக்கிய நாடுகளின் 62 வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளை இடம் பெறவுள்ள அமர்வில் உரையாற்றவுள்ளார்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-53369970406050175322007-09-24T13:04:00.000+01:002007-09-24T13:06:51.489+01:00பெற்றோலிய பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் அமெரிக்காவில் அமைச்சர் பௌசி<span style="font-size:85%;">திங்கள் 24-09-2007</span><br /><br />பெற்றோலிய பொருட்களின் விலையை விரைவில் அதிகரிக்க நேரிடும் என பெற்றோலிய மற்றும் கனியவள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.<br /><br />அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பௌசி, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 85 டொலர் வரை அதிகரிக்குமாயின் இலங்கையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.<br /><br />தற்போதைய உலக அரசியல் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது இந்த வருட இறுதியில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை நூறு அமெரிக்க டொலராக உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />இலங்கையில் எண்ணெய் வளம் தொடர்பாக ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே அமைச்சரின் அமெரிக்க விஜயத்தின் நோக்கமாகும்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-60734714905977861022007-09-24T12:58:00.000+01:002007-09-24T13:00:36.657+01:00மன்னார் தம்பனையில் மோட்டார் எறிகணைத் வீச்சு: படைத்தரப்பில் 2 பேர் பலி! மேலும் 8 பேர் படுகாயம்<span style="font-size:85%;">திங்கள் 24-09-2007<br /></span><br />மன்னார் தம்பனை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் இருவர் கொல்லபட்டு மேலும் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.<br /><br />முதலில் விடுதலைப் புலிகள் தம்பனை முன்னரங்க நிலைககளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்திய போது படையினரும் பதிலுக்குத் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் சிறீலங்கா தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-85004507426840857442007-09-24T12:56:00.000+01:002007-09-24T12:58:42.006+01:00போரை முடிவுக்கு கொண்டுவர அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வலியுறுத்தல்<span style="font-size:85%;">திங்கள் 24-09-2007</span><br /><br />இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.<br /><br />ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நாடுகளும் இதனை வலியுறுத்தின.<br /><br />இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நியூசிலாந்து பிரதிநிதி ஆமி லௌரென்சன் பேசியதாவது:<br /><br />இலங்கையின் தற்போதைய மோதல்களால் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்வது கவலைக்குரியதாக உள்ளது. இருதரப்பும் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும்.<br /><br />ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையர் லூய்ஸ் ஆர்பர் அடுத்த மாதம் இலங்கைக்குச் செல்வதை நியூசிலாந்து முழுமையாக ஆதரிக்கிறது. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கான அனைத்துலகத்தின் முயற்சிகளை நாம் ஏற்கிறோம் என்றார் அவர்.<br /><br />அவுஸ்திரேலியாவின் பிரதிநிதி கை ஓப்ரெய்ன் பேசியதாவது:<br /><br />இலங்கையின் இனமோதல் அதிகரித்து வருவதால் அதிக அளவிலான இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது. அனைத்து வகையான சிறார் கடத்தல் மற்றும் படையணிகளில் சேர்ப்பை அனைத்துத் தரப்பும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கருணா குழுவினராலும் சிறார்கள் தொடர்ந்தும் படையணிகளில் சேர்க்கப்படுவதாக அறிக்கைகள் வெளியாவது கவலைக்குரியது என்றார் அவர்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-56004010123376025182007-09-23T18:41:00.000+01:002007-09-23T18:43:43.336+01:00பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல்<img id="BLOGGER_PHOTO_ID_5113456648003804546" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="138" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpFQWw9yZktNgugXXLKE7Jn-geod3jY5gmmfGkHuYlGVyJSGkUPPifa82HvMzaeyeLeuFbD_pF59p4LxpWUxavXJlUb0E3RK3049IGC1i7YbB3wBpFG_es_K05SH-c9z3l7VhBc_5d2wb4/s200/%E0%AE%AE%E0%AF%81.+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF.jpg" width="200" border="0" /><span style="font-size:85%;">ஞாயிறு 23-09-2007<br /></span><br />விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது.<br /><br />சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளை கடுமையாக கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.<br /><br />ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன.<br /><br />இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-75026045888992022352007-09-23T18:34:00.000+01:002007-09-23T18:36:15.401+01:00மட்டக்களப்பில் சிறுவன் சுட்டுக்கொலை<span style="font-size:85%;">ஞாயிறு 23-09-2007<br /></span><br />மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.<br /><br />மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது.<br /><br />தனது நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர்.<br /><br />சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் செல்வகுமார் ராஜ்குமார் என்றும் சங்கபுரம் 16 ஆம் கொலனியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.<br /><br />இதனிடையே தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடனான சடலம் ஒன்றை களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறையினர் இன்று காலை குருமன்வெளிப் பகுதியில் மீட்டுள்ள்னர்.<br /><br />அது நேற்று காணாமல் போன ஆறுமுகம் முருகன் (வயது 35) என்ற நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-76468982788035246032007-09-23T18:33:00.000+01:002007-09-23T18:34:52.425+01:00மாணவர், ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐ.நா சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும்: முல்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்<span style="font-size:85%;">ஞாயிறு 23-09-2007</span><br /><br />20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்னம் தெரிவித்துள்ளார்.<br /><br />புதுக்குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (20.09.07) நடத்தப்பட்ட வான் தாக்குதலினால் மாணவர்கள் எதிர்கொண்ட பாதிப்பை வெளிப்படுத்தி நேற்று முன்நாள் புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட கண்டனப் பேரணியின் முடிவில் அவர் ஆற்றிய உரை:<br /><br />முல்லைத்தீவு வலயத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதை மனிதநேய அமைப்பினர் அனைவரும் அறிவர்.<br /><br />இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதான வானூர்தித் தாக்குதல்களை இங்கு பணியாற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் அறியும்.<br /><br />இத்தகைய வான் தாக்குதல் சம்பவங்கள் நவாலித் தேவாலயத்தில் தொடங்கி நாகர்கோவில் அரச பாடசாலையில் இன்னுமொரு புதிய வடிவம் பெற்றது.<br /><br />2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் அதிகமான உயிர்களைப் பலி கொண்டது.<br /><br />இதன் பின்னர் தொடர்ந்தும் மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களைப் பாதிக்கின்ற வானூர்தித் தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன.<br /><br />வேணாவில் முருகானந்தா பாடசாலையை அண்மித்த பகுதியில் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் மாணவன் ஒருவர் காயமடைந்திருந்தார். ஏனைய மாணவர்கள் பாதுகாப்புத் தேடி தப்பி ஓடினர். இதனால் பெருமளவான உயிரிழப்புக்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.<br /><br />பாடசாலை நடந்து கொண்டிருக்கின்ற போது வியாழக்கிழமை வான்பரப்பில் பிரவேசித்த வானூர்திகள் மிகவும் நெருக்கமான மக்கள் நடமாட்டப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின. இதனால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.<br /><br />இந்த நேரத்தில் முக்கிய கல்லூரிகளான புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, வேணாவில் முருகானந்தா, சிறிசுப்பிரமணிய வித்தியாலயம், கோம்பாவில் விக்கினேஸ்வரா போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருந்தனர்.<br /><br />தமது உயிரைக் காத்துக் கொள்வதற்காக பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி வீடுகளுக்குச் சிதறி ஓடினர்.<br /><br />இதன் பின்னர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் அதிபர்களிடம் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.<br /><br />இதனை அடுத்து பாடசாலை அதிபர்கள் என்னிடம் இந்த நிலைமையைக் கூறினார்கள். பெற்றோரின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது. ஏனெனில் பாடசாலைக் கல்வியை மிகவும் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாது கற்க வேண்டும்.<br /><br />இப்பிரதேசத்தில் தினமும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வந்தால் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப மாட்டார்கள். அபாயம் மிக்க கல்வியை விடப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயிர் மேலானதாக இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று.<br /><br />அபாயம் நிறைந்த இந்த நிலையால் முல்லை மாவட்டத்தில் முழுமையான கல்வியும் ஸதம்பிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளம்பிலில் ஒரு மாணவர், தனது இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார்.<br /><br />வான் தாக்குதல்களாலும் கடற்படைத் தாக்குதல்களாலும் அந்தப்பகுதிப் பாடசாலைகளின் கல்வி மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.<br /><br />புதுக்குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரமும், நேற்றும் நடைபெற்ற சம்பவங்களால் இந்தப் பகுதிப் பாடசாலைகளிலும் கல்வி மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.<br /><br />கைவேலி கணேசா பாடசாலையில் நடைபெற்ற தாக்குதல்களால் தற்போது அங்கு மாணவர்கள் வரவு மிகவும் மோசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய நெருக்கடி நிலை காரணமாகப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.<br /><br />ஆகவே எமது மாணவர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்துலக நிறுவனங்கள் கண்காணிப்பாளர்கள் அரசின் இத்தகையத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த வகையில் எமது பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களிற்கும் பாடசாலை அதிபர்களால் தரப்பட்ட மனுவை நான் கையளிக்கின்றேன். மாவட்டத்தில் கல்வி கற்கும் 20 ஆயிரம் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பாடசாலைச் செயற்பாடுகளிற்குப் பாதுகாப்பு வழங்க உறுதி தர வேண்டும் என்றார் அவர்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-27595648918852713662007-09-23T18:31:00.000+01:002007-09-23T18:33:02.759+01:00சந்திரிகா-மன்மோகன் ஆலோசனை: அதிருப்தியில் மகிந்தஞாயிறு 23-09-2007<br /><br />இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.<br /><br />சந்திரிகாவின் இந்தியப் பயணம் குறித்து சண்டே ரைம்ஸ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:<br /><br />சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இந்தியா சென்றார். முதலில் சென்னையில் சந்திரிகா தங்கினார். சந்திரிகாவின் நெருங்கிய நண்பரும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக சந்திரிகாவினால் சிறிலங்காவின் தேசிய கௌரவத்தை பெற்றவருமான "இந்து" ஏட்டின் ஆசிரியர் என்.ராமின் விருந்திரான சென்னையில் தங்கினார் சந்திரிகா. அதன் பின்னர் புதுடில்லி செல்ல சந்திரிகா திட்டமிட்டார். சென்னையில் சந்திரிகா இருந்தபோது அவருக்கு ஆச்சரியமடையும் வகையில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. புதுடில்லிக்கு சந்திரிகா சென்றடையும்போது பிரதமர் மன்மோகன்சிங்குடன் <br />பிற்பகல் உணவு விருந்தில் சந்திரிகா பங்கேற்க இயலுமா என்று கேட்கப்பட்டதுதான் அந்த ஆச்சரியம். சந்திரிகாவும் உடனே ஒப்புக் கொண்டார்.<br /><br />அந்த பகல் விருந்தில் முக்கிய பிரமுகர்கள் அணிவகுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காமையினால் அவரது மகன் ராகுல் காந்தி, வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இரண்டு கபினட் அமைச்சர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். <br /><br />இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிந்த அரசாங்கம் தாமதிப்பது, வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பிலான இந்தியாவின் அதிருப்தி, மனித உரிமைகள் சீர்குலைவுகள் தொடர்பிலான உறுதிமொழிகளுக்கு மாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு ஆகியவை தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.<br /><br />அப்போது இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசியுள்ளார். அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது தொடர்பாக சந்திரிகாவும் மன்மோகன்சிங்கும் ஆலோசனை நடத்தினார்களா என்பதை கண்டறிவதற்காக மணிசங்கர் ஐயரை மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டுள்ளார். கொழும்பில் "இந்து" ஏட்டின் ஆசிரியர் ராம் இருந்தபோது அவரை இரவு விருந்துக்காக மகிந்த ராஜபக்ச அழைத்துள்ளார். மகிந்தவும் ராமும் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சுக்களின் போதும் சந்திரிகாவின் இந்தியப் பயணம் தொடர்பில் பலமுறை மகிந்த கேட்டுள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-22515001392178429432007-09-23T18:29:00.000+01:002007-09-23T18:31:25.662+01:00விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கோத்தபாய!<span style="font-size:85%;">ஞாயிறு 23-09-2007</span><br /><br />சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் இன்று ஐலண்ட பத்திரிகைக்கு தெரிவித்த செவ்வியில் விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு திரும்பும் பட்சத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கையினை மேற்கொள்ளமாட்டார்கள் எனத்தெரிவித்துள்ளார்.<br /><br />இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ சிலதினங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்ற செயல் எனவும் இராணுவத்தீர்வின் மூலமே தீர்வு எய்தப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.<br /><br />எனினும் தற்போது நியூயோர்க் நகரில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடரில் சிறீலங்கா ஜனாதிபதி பேசவிருக்கும் இத்தருணத்தில் கோத்தபாய இவ்வாறு குத்துக்கரணமடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகவும்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-81851391879641310092007-05-21T12:32:00.000+01:002007-05-21T12:39:23.484+01:00ஓமந்தை மேற்கில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி.திங்கள் 21-05-2007<br /><br />இன்று காலை 8.14 மணியளவில் ஓமந்தை மேற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.<br /><br />எனினும் சிறீலங்கா இராணுவம் இச்சம்பவமானது இரணை இலுப்பைக்குளம் பகுதியில் காலை 7.15 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.<br /><br />இதேவேளை மணலாறு வெலிஓயா முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களின்போது மேலும் இரு படையினர் கொல்லப்ட்டுள்ளதாக தெரியவருகிறது.<br /><br />கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை முன்னரங்க சோதனைச்சாவடி இன்று காலை 9.15 மணியளவில் மீளவும் பொதுமக்கள் போக்குவரத்திற்கா திறந்துவிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-73562392914219058682007-05-21T12:30:00.000+01:002007-05-21T12:40:06.085+01:00பல் கலைக்கழக பாதுகாப்பு ஊழியருக்கு எச்சரிக்கை: போடப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டது.திங்கள் 21-05-2007<br /><br />யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களுக்கு நள்ளிரவு நேரம் உந்துருளியில் வரும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஆயுத ஒட்டுக்குழுவினால் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.<br /><br />கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த இராணுவத்தினர் மற்றும் ஆயுத ஓட்டுக் குழுவினர் பல்கலைக்கழக ஊழியரைத் தாக்கியதுடன் கிழக்கு மாகாண மக்களின் துயர்துடைப்பு நிதி உண்டியலையும் உடைத்து பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்தும் சென்று இருந்தார்கள்.<br /><br />இது சம்பந்தமாக குறிப்பிட்ட பாதுகாப்புக் கடமையில் இருந்த ஊழியர் இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுசரனையுடன் செய்திருந்தார்.<br /><br />கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நள்ளிரவு நேரம் குறிப்பிட்ட நபர் கடமையில் இருந்து வேளையில் பல்கலைக்கழக பின்புற மதில் பாய்ந்து உள்ளிறங்கிய குறிப்பி;ட்ட குழுவினர் குறிப்பிட்ட பாதுகாப்பு அலுவலரின் தேசிய அடையாள அட்டை உட்பட அனைத்து அடையாள அட்டையையும் பறித்துக் கொண்டு உடனடியாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மீளப் பெறவேண்டும் எனவும் இல்லதுவிட்டால் கொலை செய்யப்படுவார் என்று பயமுறுத்தியதைத் தொடர்ந்து செய்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.<br /><br />தற்போது பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் இரவில் கடமை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகி வருகின்றமையால் கடமையைச் செய்ய முடியாத நிலமைக்குள் காணப்படுகின்றார்கள்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-84942756795419830192007-05-21T12:25:00.000+01:002007-05-21T12:41:01.228+01:00வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_jDX6-kJvUQmC19CdaJupVp3bF03tFN8mjO72nmbmg_qoXIn6tihQZ0Swpm5VFV4McqRsOCYmrXyznPcNHvZsGmdft7jxrYJVxD79SpvbRdAU4i3p59i4kg_FNhnI96CdQ2zL1LEJPfq2/s1600-h/Army-1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5066974512562418370" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 172px; CURSOR: hand; HEIGHT: 122px" height="164" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_jDX6-kJvUQmC19CdaJupVp3bF03tFN8mjO72nmbmg_qoXIn6tihQZ0Swpm5VFV4McqRsOCYmrXyznPcNHvZsGmdft7jxrYJVxD79SpvbRdAU4i3p59i4kg_FNhnI96CdQ2zL1LEJPfq2/s320/Army-1.jpg" width="226" border="0" /></a><br />திங்கள் 21-05-2007<br /><br />வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார்,<br />வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.<br /><br />இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, .<br /><br />மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.<br /><br />இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இருதரப்பும் பாரிய படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-62999713048689920502007-05-03T10:17:00.000+01:002007-05-03T10:18:50.368+01:00மகிந்தவின் பயணங்கள்.வியாழன் 03-05-2007<br /><br />-மனோகரன்-<br /><br />சிறிலங்கா ஜனாதிபதி இந்தவாரம் மீண்டும் நாட்டைவிட்டுப் பயணமாகியிருக்கிறார். இந்தப்பயணத்துக்குப்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிறிலங்காவைப்பொறுத்தவரையில் அடுத்த ஜூலை மாதம் வரை பல நெருக்கடிகளையும் அழிவுகளையும் சந்திக்கவேண்டிய நிலை தென்படுவதாகவும், நாட்டின் தலைவர்களுக்கு உயிராபத்துகள் ஏற்படக்கூடிய பேரபாயங்கள் உண்டென்றும் சோதிடர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் யாரெல்லாம் தம்மைத்தலைவர்களாகக் கருதினார்களோ அவர்களெல்லாம் நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்போகிறவர்கள் ஒவ்வொரு சாட்டுடனும் ஒவ்வொரு வேலையோடும் போகிறார்கள். அப்படித்தான் எதிர்க்கட்சித்தலைவர் ரணிலும் போயிருக்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் போயிருக்கிறார்.<br /><br />சிங்கள ஆட்சியாளர்கள் தங்களை நம்புவதை விடவும் அதிகமாக சோதிடத்தை நம்புகிறார்கள். இதில் மகிந்த ராஜபக்ஸ இன்னும் கூடுதலான ஈடுபாடுடையவர். அதனால், அவர் நாட்டுக்கு வெளியே நிற்பதையே விரும்புகிறார். அதுதான் தனக்குப்பாதுகாப்பானதெனவும் அவர் கருதுகிறார்.<br /><br />அடுத்த காரணம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் சம்மதிக்கப்பட்ட நிதி இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, அதனைப்பெற்றுக்கொள்தற்கான ஏற்பாடுகளை இந்தச்சந்தர்ப்பத்தில் கவனிப்பது என்பது.<br /><br />இன்னொரு காரணம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கு அண்மையில் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்திகளையும் நெருக்கடிகளையும் தணிக்கும் பொருட்டான சூழலை உருவாக்குவது. இந்தப்பிரச்சினைதான் இப்போது சிறிலங்காவுக்குள்ள ஆகப்பெரும்; நெருக்கடியைத்தருவது. இதுதான் முழுஅளவில் யுத்தத்தைச் செய்யவிடாமல் இடைஞ்சலாக இருப்பதும்.<br /><br />இவ்வாறு தன்னைச்சூழவுள்ள நெருக்கடிகளைத்தணிக்கும் அவசியத்தோடு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. முதலில் சோதிடம் என்ன சொல்லியிருக்கிறது என்பதைவிட அதில் சொல்லப்பட்ட விசயம் என்னவென்று பார்க்க வேண்டும். அடுத்து வரும் மாதங்களில் சிங்களத் தலைவர்களுக்குப் பெருங்கெடுதி என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியமிருக்கமுடியும்?<br /><br />தமிழர்களின் மீது பெரும்போரைத் தொடுத்துக்கொண்டிருந்தால் தமக்கு ஆபத்துவராதென்று இவர்களால் எப்படிக்கருத முடியும். வினைவிதைத்தவர் வினையை அறுக்கத்தானே வேண்டும். அதிலிருந்து தப்பமுடியுமா.<br /><br />இதில் சோதிடர்கள் மிகச்சரியான அரசியல் அவதானிகளாக இருக்கிறார்கள். அவர்கள் நடக்கவுளள்ள நிகழ்ச்சிகளை சரியாகத்தான் கணித்துள்ளார்கள் போலுள்ளது.<br /><br />அடுத்தது, உதவிவழஙகும் நாடுகளால் வாக்களிக்கப்பட்ட நிதி இன்னும் வந்து சேரவில்லை என்பது. இந்த நிதி இன்னும் வழங்கப்படாததற்கு நிறையக்காரணங்களுண்டு.<br /><br />மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டுவந்த விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய அரசாங்கம் காரணமாக இருந்தது. இதற்கடுத்தது, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டபோதும் அது முன்வைக்கப்படுவதற்கான எந்த சாத்தியங்களும் காணப்படவில்லை என்பது. இப்படியானதொரு சூழலில் தம்மால் இலங்கைக்கு உதவியாக வழங்கப்படும் நிதி பெறுமதியான முறையில் செலவழிக்கப்படுமா என அந்த நாடுகள் சந்தேகம் கொள்வது. யுத்தம் இல்லாத சூழலில்தான் வழங்கப்படும் நிதி முழமையான பயனைத்தரும் என்றும் இல்லையென்றால் இந்;த நிதி வீணாக அழிவுகளுக்கே செலவழியும் எனவும் காலி மாநாட்டில் உதவும் நாடுகள் தெரிவித்திருந்ததை இங்கே நினைவிற்கொள்ளலாம்.<br /><br />ஏற்கனவே சுனாமி நிவாரணமாக வழங்கப்பட்ட நிதியை தமிழருக்குரிய வகையில் பொதுவாகப் பகிரவில்லை என்ற குற்றச்சாட்டுண்டு சிறிலங்கா அரசாங்கத்தின்மீது.<br /><br />போர்ச்சூழல் குறைந்தாலே அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இந்த உதவிவழங்கும் நாடுகளின் மாநாடு காலியில் நடந்தபோது இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. அத்துடன் வழங்கப்படும் நிதியும் அந்த நிதியைப்பயன்படுத்தப்படும் விதத்தைப்பொறுத்தே அமையுமென்றும் அதுவும் கட்டம் கட்டமாகவே வழங்கப்படுமென்றும் அங்கே தெரிவிக்கப்பட்டிருந்தது.<br /><br />உதவிவழங்கும் நாடுகளின் அறிவுறுத்தல்கள் எதனையும் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு இப்போது காசுக்கு அலைகிறார் மகிந்த ராஜபக்ஸ.<br /><br />பேச்சுவார்த்தைச்சூழலை இல்லாமற்செய்தது தொடர்பாக மேற்குலகத்துக்கு உள்ளுர சிறிலங்கா அரசின்மீது வருத்தமுண்டு. குறிப்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் நோர்வேயையும் பல சந்தர்ப்பங்களில் அது பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது தொடர்பாகவும் மேற்குலகம் அதிருப்தி கொண்டுள்ளது. ஆனால் அதனை வெளிப்படையாக தெரிவிக்கவோ இதைவைத்து அரசாங்கத்துக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கவோ மேற்குலகம் தயாராகவில்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அப்படி கண்டிக்கும்போது சிறிலங்கா சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்து விடும் என்று மேற்குலகம் அஞ்சுகிறது. சிறிதோ பெரிதோ சீனாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவது மேற்;குலுகத்துக்குச் சவாலானதே. அதேவேளை அவசரமான முறிவுநிலையை மேற்குலகம் இலங்கையைப்பொறுத்து இப்போது விரும்பவில்லை. முறிவோ விலகலோ ஏற்படாமல் பொறுமையைக்கடைப்பிடித்து பிரச்சினையைக் கையாளலாம் என்றும் அது நம்புகிறதாகத் தெரிகிறது.<br /><br />இதற்கமையவே இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் பிரச்சினையை அது கையாள்கிறது. மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பெரும்பிரச்சாரத்தைச் செய்வதன் பின்னணியும் இதுதான்.<br /><br />மனித உரிமைப்பிரச்சினைகளை ஐரோப்பாவும் அமெரிக்காவும் சமநேரத்தில் கையாள்கின்றன. இப்போது சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவகையில் இருப்பதும் இந்தப்பிரச்சினைதான். இந்தப்பிரச்சினையை அவை தூக்குவதன் மூலம் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்கிறார்கள் என்ற கண்டனத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். இலங்கையைப்பொறுத்து ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் வெளிச் சக்திகளுக்கெதிரான கலகக்குரலோடு எப்போதுமிருப்பவை. அதிலும் அவை மேற்குலகத்தை கடுமையான தொனியில் விமர்சிப்பவையும்கூட அதேவேளை அண்மைக்கால சிங்கள அரசியலில் கணிசமான செல்வாக்கை இவை செலுத்துபவையுமாகும்.<br /><br />சிங்களவரின் இன, மத உணர்வைத்தூண்டும் இந்தச்சக்திகள் குறித்த அவதானத்தை மேற்குலகம் கொண்டுமுள்ளது. இந்த உணர்வுகளைத்தாண்டி மக்களை எந்த வழியிலும் தமக்கெதிராக திசைதிருப்பமுடியும் என்பதால் அது இது தொடர்பாக கவனமாக இருக்கவே விரும்புகிறது.<br /><br />சமாதானப் பேச்சுவார்த்தையின் அனுசரணையாளராக இருந்த நோர்வேக்கெதிராக ஒரு படிமத்தை இந்தச்சக்திகள் உருவாக்கிவிட்டன. இப்போது சிங்களவர்களைப்பொறுத்தவரையில்; நோர்வே தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என்றே நம்புகிறார்கள். அப்படியான படிமத்தை ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் சிங்கள ஊடகங்களும் சிங்கள மக்களிடத்தில் உருவாக்கி விட்டன. இந்த முன்னனுபவத்தின் படியே தொடரும் பிரச்சினைகளைக் கையாளச் சர்வதேச சமூகம் விரும்புகிறது. குறிப்பாக மேற்குலகம்.<br /><br />சர்வதேச மன்னிப்புச்சபையின் மூலமாக ஐரோப்பாவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலமாக அமெரிக்காவும் இந்த அழுத்தத்தை சிறிலங்காவுக்கு ஏற்படுத்த முனைகின்றன. மேற்குலக கனவான் மரபின்படியும் நேரடியாக உள்நாட்டரசியலில் தலையிடாமல் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதன் மூலமும் மதிப்புமிக்க நிலையை அவை பேணுகின்றன.<br /><br />ஆக, இவ்வாறான பலமான அழுத்தங்கள், பிரச்சினைகளின் மத்தியில் தனக்கான ஸ்திரத்தன்னையை நிலைநிறுத்த வேண்டுமாயின் அதற்கான பிரயத்தனங்களில் விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதி ஈடுபட்டேயாக வேண்டியுள்ளது.<br /><br />முதலில் அவர் உதவி நிதியைப்பெற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஜேர்மனியோடு சிறிலங்காவுக்கு அண்மைக்காலத்தில் அக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன என்பதையும் இங்கே நாம் கவனிக்கலாம். இந்தப்பின்னணியில் மகிந்த ராஜபக்ஸ புதிய உபாயத்தைக் கையாள முற்பட்டிருக்கிறார்.<br /><br />ஐரோப்பா, அமெரிக்கா அடங்கிய மேற்குலகத்தில் புனித பாப்பரசருக்கு பெரும் மதிப்புண்டு. சிறிலங்கா அரசின்மீது முன்வைக்கப்பட்டுவரும் பல வகையான குற்றச்சாட்டுகளையும் போக்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ பாப்பரசரைப் பயன்படுத்த முனைகிறார். பாப்பரசரை தனக்குச்சாதகமாக பேச வைப்பதன்மூலம் இதனைச்சாதித்து விடலாம் என்றும் அவர் வலுவாக நம்புகிறார்.<br /><br />ஆக பாப்பரசரை நேரில் சந்திப்பதன்மூலமும் அவருக்கு தனது அரசு இனப்பிரச்சினையைத்தீர்ப்பதறகாக அரப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சொல்வதன் மூலமும் மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் தான் கூடிய அக்கறையுடன் செயற்படவுள்ளதாக வாககுறுதியளிப்பதனூடாகவும் ஒரு புதிய சாதக நிலையைத் தோற்றுவிக்கலாம் என்பதே அவரின் நிலைப்பாடு.<br /><br />அத்துடன் புனித பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ற் ஜேர்மனியைச்சேர்ந்தவர் என்பதையும் இங்;கே கவனிக்க வேண்டும்.<br /><br />இலங்கையில் இனப்பிரச்சினையைத்தீர்பபதற்கு முன் பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியுள்ளதாக மகிந்த ராஜபக்ஸ பாப்ரசரிடம் சொன்னதாவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதப்பிரச்சினை எனபது சர்வதேசப் பிரச்சினை என்றும் அதனால் அந்தப்பிரச்சினைக்கு தாம் தவிர்க்க முடியாமல் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் பாப்பரசருக்கு (கயிறு விட்டிருக்கிறார்) சொல்லியிருக்கிறார்.<br /><br />தனது இந்த நடவடிக்கையை சில தரப்புகள் தவறாக புரிந்து கொண்டு மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் தொடருகின்றன என்று பெரிது படுத்;துகின்றன என்றும் அவர் பாப்பரசருக்கு விளக்கமளித்துள்ளார். இப்போது மகிந்த ராஜபக்ஸ விரும்புவது, தான் சொன்னவற்றை பாப்பரசர் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே. ஆனால் அது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற பிரச்சினையுண்டு.<br /><br />மகிந்த ராஜபக்ஸ பாப்பரசரைச் சந்திக்கமுன்னரே மனித உரிமைகள் கண்காணிப்பகமும் பிற அமைப்புகளும் பாப்பரசருக்கு உண்மை நிலைமைகளைச்சுட்டிக்காட்டி கடிதங்களையும் தகவல்களையும் அனுப்பிவிட்டன.<br /><br />இந்த நிலையில் பாப்பரசர் எத்தகைய தெரிவிப்புகளை மேற்கொள்வார் என்றே இப்போது மகிந்த ராஜபக்ஸவும் பிற தரப்பினரும் மக்களும் எதிர்பார்க்கின்றனர். பாப்பரசர் தனக்குச்சாதகமான நிலைப்பாட்டை எடுப்பாராக இருந்தால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடிகளை ஓரளவுக்குத் தாண்டிவிடலாம் என்றே ராஜபக்ஸ நம்பியிருக்கிறார்.<br /><br />இதேவேளை கலங்கிய குளத்தில் மீனைப்பிடிக்க இதுதான் சந்தர்ப்பம் என்று மனித உரிமை மீறல்கள் தொடரபாக எழுந்துள்ள சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பலைகளை தனக்கான அரசியல் தளமாக்க முனைகிறார் ரணில். ரணிலுக்குக் கிடைத்துள்ள ஆகக்கூடுதலான துருப்புச்சீட்டு இப்போது இதுமட்டும்தான்.<br /><br />எனவே ரணில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இதைப்பெருப்பிக்க முனைகிறார். இதற்காக அவர் இப்போது வெளிநாடுகளில் ஆதரவுதேடும் பயணங்களில் ஈடுபட்டுள்ளார். இது மகிந்தவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற இன்னொரு காரியம். ஆனாலும் மகிந்த இதையெல்லாம் கடந்துதான் ஆகவேண்டும்.<br /><br />போரைச் செய்வதற்கு அரசாங்கத்துக்குப் பெருமளவு நிதி தேவை. அந்த நிதியை சிறிலங்காவின் தேசிய வருமானத்திலிருந்து ஒருபோதும் பெற்றுக்கொள்ளமுடியாது. எனவே வெளியிலிருந்து பெறப்படுகின்ற நிதியையும் பிற உதவிகளையும் வைத்துத்தான் இதுவரையும் தமிழருக்கெதிரான போரை நடாத்தி வந்தன இதற்குமுன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள். இதே ஆதரவை தானும் பெற்றுவிடலாம் என்றுதான் நினைத்தார் மகிந்தவும். ஆனால் இது இப்போது கொஞ்சம்; சிக்கலாகியிருக்கிறது. மகிந்த உள்நாட்டில் ஆதரவைப்பெற்றுள்ள அளவுக்கு வெளியுலகத்தில் செல்வாக்கைத்தேடவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிங்கள மக்களிடம் அவர் போரைச் செய்வதற்கான ஆதரவுத்தளத்தை உறுதியாக்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கன்றன. போருக்கான ஆதரவைப் பெற்றுவிட்டால் மனித உரிமைப்பிரச்சினைகளைப்பற்றி எவரும் வாய்திறக்கமாட்டார்கள்.<br /><br />அப்படியென்றால் அந்தளவுக்கு சர்வதேச ஆதரவைப்பெறுவதில் அவர் அக்கறை கொள்ளவில்லையா அல்லது அதற்குரிய ராஜதந்திர முதிர்ச்சியை அவர் பெறவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மகிந்த சிந்தனையும் ஜே.வி.பி யும் பிரதான காரணங்களாகியிருக்கின்றன.<br /><br />மகிந்த சிந்தனை மேற்குலகத்துக்கு அதிகம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்கவேண்டும். தவிர நெகிழ்ச்சிக்குரிய எந்தத்தன்மையையும் அவருடைய அணுகுமுறையிலும் அவருடைய சகாக்களிடமும் மேற்குலகம் காணவில்லை என்றும் சொல்கிறார்கள். எப்போதும் முரண்தன்மைகளையுடைய பேச்சுகளிலும் நடவடிக்கைகளிலுமே மகிந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்ற விமரிசனம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் வரையில் மகிந்த அரசாங்கத்தப்பற்றி உருவாகியிருக்கிறது.<br /><br />இத்தகைய அக,புறச்சூழலில் தடைகளைத்தாண்ட முற்படும் மகிந்த கையாளும் சூழ்ச்சிகளை விடவும் அதிக வல்லமை கொண்டவை வெளியே திரண்டிருக்கிற அதிருப்தி அலைகளும் எதிர்ப்புணர்வும். இது தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம். அரசியலிலும் போரிலும் தமிழர்கள் வெற்றிகொள்வதற்கான தருணம்.<br /><br />இதை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்;தப்போகிறார்கள் என்பது முக்கியமானது. தாய்நிலமும் புலமும் இதற்கான பதிலை விரைவில் தரத்தான் போகின்றன. சிங்கள தேசத்தின் போர்வெறிக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கத்தான் போகிறது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-9417259922528759272007-05-03T10:14:00.000+01:002007-05-03T10:15:34.880+01:00சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது.வியாழன் 03-05-2007<br /><br />-ச.சங்கரன்-<br /><br />உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது.<br /><br />சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.<br /><br />சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை இஸ்லாமியத் தமிழர் மத்தியிலும் சில மலையகத் தமிழர் மத்தியில் இருந்தும் மேற் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.<br /><br />அதன் ஒரு கட்டமாக சமுர்த்தி என்றழைக்கப்படும் புனர்வாழ்வுத்திட்டத்தில் புலனாய்வுக்கான அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. சமுர்த்தி திட்டமும் சிறிலங்காப் புலனாய்வுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டாலும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் புலனாய்வு அதிகாரிகளாக உள்ளனர் சமுர்த்தி திட்டத்திலும் அதிக பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால், பணியாளர்களாக கடமையாற்றுவோர் புலனாய்வு வேலை என்பதை தெரியாமலேயே பணியாற்றுகின்றனர்.<br /><br />சிறிலங்காப் புலனாய்வுச் சேவையில் முன்னர் ஆண்கள் ஆற்றி வந்த வேலையின் ஒரு பகதியை இன்று பெண்கள் செய்கின்றனர் பெண்களினால் பல ஆண்களிடம் இருந்து தகவல்களைப் பெற முடிகின்றது 10 ஆண் புலனாய்வாளர்களின் வேலையினை 7 பெண்கள் செய்வதாக கூறப்படுவதுடன் அதனால் எதிர் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் திட்டம் பலனாய்வுத்துறையினருக்கு உண்டு.<br /><br />உலகெங்கிலும் சில வருடங்களாக இரகசிய புலனாய்வுச் சேவையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்த போதிலும் அவர்களின் பங்குபணிகள் பெருமளவில் மறைக்கப்பட்டே வந்தன. அதனால் அவர்கள் இலகுவாக பணியாற்றக் கூடியவாறும் இருந்தது.<br /><br />பெண்களினால் பலரை இலகுவில் வசப்படுத்த முடியும் என்பதனாலும் உடல் கவர்ச்சி மூலம் பலரை அரவணைத்துச் செயற்பட முடியும் என்பதினாலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்துள்ளது.<br /><br />சிறிலங்காப் புலனாய்ச் சேவையில் பணியாற்றும் பெண்களில் 80 வீதமான பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் 18- 20 வயதில் இவர்கள் உளவுச் சேவைக்கு இணைக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.<br /><br />இலங்கை அரச உளவுச் சேவையில் ஒவ்வொரு ஆண் புலனாய்வளார்களும் 10 பெண் முகவர்களை கட்டாயம் கையாள வேணடும் எனவும், அவர்கள் மொத்தம் 40 முகவரை ஒரு ஆண் புலனாய்வாளர் கையாள வேண்டும் எனவும் அரச புலனாய்வு நிறுவனத்தின் கட்டமைப்பு கூறுகின்றது.<br /><br />பிரித்தானியாவின் புலனாய்வுச் சேவையான ஆ.ஐ-5 இல் 40 வீதம் பெண் புலனாய்வாளர்கள் இருப்பதுடன் 50 வீதத்திற்கு மேலானவர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது<br /><br />சிறிலங்காவின் உள்ளகப் புலனாய்வு கட்டமைப்பில் மாத்திரமன்றி வெளியகக்கட்டமைப்பிலும் பெண் புலணாய்வாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராலயங்களினால் வெளிநாடுகளில் நவநாகரிகத்தில் மூழ்கிப் போன அழகிய பெண்கள் பணியாற்றுவதாக அறிய முடிகின்றது. இவர்களினால் பலர் தேசத்தின் பெயரால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. தேசத்திற்காக உடலை அர்ப்பணிப்பதாக இவர்களுக்கு உணர்வூட்டப்பட்டு வருகின்றது. அதனால் அவர்கள் பெருமை கொள்கின்றனர்.<br /><br />உளவுத் துறைப் பணியில் ஈடுபடும் பெண்கள் பாலியல் உறவின் மூலம் ஆண்களை வசப்படுத்தி அவர்களிடம் இருக்கும் தகவல்களை அப்படியே திருடுகின்றனர். அவர்களின் வல்லமை கவர்ச்சியால் பாலியல் பலவீனம் உள்ள ஆண்களை பெண் ஒற்றர்கள் தேசத்தின் துரோகிகளாக்கி விடுகின்றனர் அவர்களிடம் இருந்து பெறுமதியான புலனாய்வு தகவல்களைப் பெறுகின்றனர். பாலியல் தொடர்பினைப் பேணும் இப்பெண்களினால் இலகுவில் பெறுமதியான புலனாய்த் தகவல்களை சேகரிக்க முடிகின்றது.<br /><br />உளவு பார்க்கும் தொழிலில் ஆண்களை விட பெண்கள் திறமையாகப் பணியாற்றுகின்றனர் என புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆராய்ந்து அறியும் திறனும், கூர்ந்து நோக்கும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. இதனால் சிறிலங்காவிலும் பெண் உளவாளிகள் உளவுத்துறைக்கு அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.<br /><br />சிறிலங்காவில் பயங்கரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பெண்களை இணைத்துக் கொள்ளும் திட்டம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.<br /><br />சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களினால் ஆழமான புலனாய்வு ஊடுருவல் நடவடிக்கை வெற்றி பெறவில்லையாயினும் சாதாரண ஊடுருவல் அதாவது தமிழ் பொதுமக்களிடம் இருந்து தகவல் சேகரிப்பு நடவடிக்கை வெற்றியளி திருப்பதாக கூறப்படுகின்றது.<br /><br />விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் அரச பெண் புலனாய்வாளர்களின் ஊடுருவல் வெற்றியளிக்கவில்லை என்பதினால் ஆழமான புலனாய்வுத் திட்டங்கள் வெற்றியளிக்க வில்லை.<br /><br />கடந்த காலத்தில் (2000 .இற்கு முன்) சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களின் பங்கு தென் இலங்கையில் காணப்பட்டாலும் 2000ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்குப் பகதிகளுக்கு விரிவாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரச புலனாய்வு இயந்திரம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.<br /><br />சிறிலங்கா அரசாங்கம் மலையகத் தமிழ் பெண்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவ எடுத்த பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.<br /><br />வவனியா, மன்னார் மட்டக்களப்பு, யாழ்ப்பாண நகரங்களில் அண்மைக் காலத்தில் அரச பெண் உளவாளிகளின் நடாமட்டங்கள் அதிகரித்துள்ளதினை காண முடிகின்றது.<br /><br />சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் நடவடிக்கைக்கு என அனுராதபுரத்தில் ஒரு பாலியல் புலனாய்வு மையம் ஒன்றை நடாத்தி வருகின்றது.<br /><br />வவுனியா மன்னார் பிரதேசத்தில் வாழ்வோரும், வன்னியில் இருந்து வவுனியா மன்னார் செல்வோரும் இங்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் இன்பத்திற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு அதனை புகைப்படம் எடுத்த பின் அதனை கொண்டு அவர்கள் மிருட்டப்பட்டு அவர்களிடம் இருந்து புலனாய்வுத் தகவல்கள் எடுக்கப்படுகின்றன.<br /><br />இவ்வாறாக இலங்கைத்தீவில் பல புலனாய்வு பாலியல் நிலையங்களை இலங்கை அரசாங்கம் நடாத்தி வருக்கின்றது என்பது பலருக்குத் தெரியாத விடயம்.<br /><br />விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பெண் உளவாளிகளை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.<br /><br />இதில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-17861717536959447982007-04-28T13:09:00.000+01:002007-04-28T13:11:31.808+01:00தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா)சனி 28-04-2007<br /><br />மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும்.<br /><br />உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான்.<br /><br />அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன்.<br /><br />அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்கியின் உயிர் பறிக்கப்பட்டு ஓராண்டு கழிந்துவிட்டது. பட்டப்படிப்பைத் துறந்து மானுடத்துக்காகப் போரிடப் புறப்படுதல் என்ற சேனையில் அணிவகுத்தவன், துப்பாக்கிக்குழாயிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை பேனா முனைகளால் கேள்விக்குரியதாக்கும் மறுபிறப்பை அடைந்தவன் ஆனான்.<br /><br />அதனால் அவன் ஈடுபாடு காட்டிய இதழியல் ஊடான கருத்துச்செறிவுக் குவிப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடற்தளத்தில் சர்வதேசக் கவனிப்பைப் பெற்ற ஒன்றாக மாறியது.<br />அதற்கு அவனது இருமொழிப் புலமை மேலும் வீறூட்டியது.<br /><br />1997ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் ஏரிகள் சூழ்ந்த அழகிய நகரங்களில் ஒன்றான “லுசேர்ண்” நகரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி பத்து வருடங்கள் முடிவடைந்ததையொட்டி ஓர் கருத்துக் குழும மாநாட்டை “இன்ரநசனல் அலேர்ட்” என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.<br /><br />அச் சமயம் சந்திரிகாவின் அக்கா சுனீத்திராவின் முன்னாள் கணவர் குமார் ரூபசிங்கா “இன்ரநாசனல் அலேர்ட்” அமைப்பின் தலைமைத்துவப் பதவியை வகித்திருந்தார்.<br /><br />ஏறத்தாழ முப்பது பேர் வரையில் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான புலமையாளர்கள், வல்லுனர்கள், ஒப்பந்த ஈடுபாட்டாளர்கள் என்ற வகையில் அம் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.<br /><br />“இந்து” பத்திரிகையின் ராம், இந்தியப் படைத்தளபதி கல்கத், ரோகான் குணரட்ணா, முன்னாள் வடகிழக்கு மாகாணசபை அமைச்சர் டயான் ஜயதிலகா, பிராட்மன்வீரக்கோன், ஜே.என்.டிக்சிற், அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். தராக்கி அவர்களும் இந்த மாநாட்டிலே உரையாற்றுவதற்காக சுவிஸ் வந்திருந்தார். மாநாடு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.<br /><br />மாநாடு முடிவுற்ற பின்னர் தராக்கி சூரிச்சில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வருவார்.<br /><br />அந்த வேளையிலேதான் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலே ஒர் நாள் அவரைக் கேட்டேன்.<br /><br />“நீங்கள் ஐரோப்பிய நாடொன்றிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பணிபுரியலாமே”?<br />அவரது பதில் நீரை விட்டுப் பிரிந்து மீன் உயிர் வாழுதல் சாத்தியமா? என்ற தோரணையில் அமைந்தது.<br /><br />“எங்களைப் போலை ஆக்களுக்கு அங்கைதானே வேலை கிடக்கு” என்று சிரித்தபடியே பதிலளித்தார். தொடர்ந்து மட்டக்களப்பில் காத்திரமான தமிழ் பத்திரிகையொன்றின் தேவை குறித்த அக்கறையோடு தான் இருப்பதாகவும் அது விடயமாக மேற்கொண்டு அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது. வெளிநாட்டு வாழ்க்கையில் அறவே விருப்புக் கொள்ளாத துறவுத்தனம் அவரை எனக்கு ஒரு சித்தராக உணர்த்தியது.<br />“ஒரு வகையில் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை மீள் கண்டுபிடிப்புச் செய்தோம்,” என்று கூறுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.<br /><br />தராக்கி இல்லாத வெற்றிடத்தில், சர்வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது.<br /><br />அவை தொடர்பாக தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது அரசியல் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாக அமைந்து நிரூபித்து விடுகிறது.<br />கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான அவர் எழுதிய கட்டுரையொன்றில்(கட்டுரையின் ஆங்கில வடிவமே என் கைக்கு எட்டியது) நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் குறித்த விமர்சனம் ஒன்றின் சாரத்தை இங்கு சுட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.<br /><br />நோர்வே அரசின் சமாதான ஏற்பாட்டாளர் சொல்ஹைம் அவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டத்தில் அதிசயம் நிகழ்வதற்கான எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு எழுவது வழக்கம். விளைவு ஊடகங்கள் வழியாக அதே புனைவு சிரு~டிக்கப்பட்டு மக்கள் மனங்களையும் விளிம்பு நிலைக்கு இட்டுச் செல்லும்.<br /><br />ஆனால், சொல்ஹைம் தனது நாடு திரும்பியவுடன் எல்லா எதிர்பார்ப்புகளும் வெளுத்து மக்கள் வழமையான வாழ்வியல் நீரோட்டத்திலே கலந்து விடுவார்கள்.<br /><br />சோல்ஹைம் அவர்களும் தனது வருகையின் பொழுது எப்போதும் போல நன்மைக்கான மாறுதல்கள் விரைவில் நிகழ்ந்து விடும் என்ற மந்திர உச்சாடனத்தை உரைப்பார்.<br /><br />அவ்வாறான வகையில் மிக அண்மையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சொல்ஹைம் அவர்கள் இன்னும் சில வாரங்களில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான இரு தரப்பும் பிணைந்த இணைக்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை எவையுமே இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. யாருக்காவது அது குறித்த சந்தேகம் இருப்பின் ஜே.வி;.பியினர் “அப்படியொரு கட்டமைப்பு நிறுவப்படும் பட்சத்தில் நாம் அரசிலிருந்து வெளியேறி விடுவோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதியான கிறிஸ்டினா றொக்கா அம்மையாருக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் இருந்தே உண்மை நிலையினை புரிந்து கொள்ளலாம். சமாதானத் தூதுவர் என்பவர் நம்பிக்கை ஊட்டுபவராகவே காட்சியளிப்பார். ஆனால் அவரால் உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப் பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா, இல்லையா என்ற முடிவை எடுப்பது எம்மில்தான் தங்கியுள்ளது.<br /><br />மேலே எனது உரைநடை வடிவத்துக்கு உட்படுத்தப்பட்ட அவரது கருத்துச் சாரம் யதார்த்தபூர்வமான மெய்மையாக வரலாற்றுத்தடத்திலிருந்து வெளிக் கிழம்புவதை உய்த்துணர முடியும்.<br /><br />சில நாட்களின் பின் இறுதியாக ஜெனிவா நகரில் மனித உரிமைகள் மன்றின் முன்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் தராக்கி அவர்கள் என்னோடு உரையாடியிருந்தார்.<br /><br />அத் தருணத்தில், தமிழர் தரப்பில் விடுதலை என்ற கோசத்தோடு பல்வேறு அமைப்புக்கள் 80களின் முற் கூறுகளில் கிளர்ந்த போதும் அவை வீழ்ச்சிக்குள்ளான வரலாறு பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டோம். விவாதத்தின் இடையே “தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதாலேயே அவ் அமைப்புக்கள் அழிந்தன” என்றும் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் எந்த அமைப்பும் வரலாற்றின் இயங்கு தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது அந்நியப்படுத்தப்படும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தராக்கி என்னிடம் தெரிவித்திருந்தார். அக் கருத்தினை அன்று அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது தராக்கி அவர்களின் பெயரைக் குறிப்பிடாது ஓர் பத்திரிகையாளரின் கருத்தாக சொல்லியிருந்தேன்.<br /><br />இன்று உலக அழுத்தங்கள் கூர்மைப்படுத்தப்பட்டு பல்வேறு முனைகளில் இருந்து புறப்பட்டு எம்மையே தாக்குகிற இத் தருணங்களில் தேசிய இனப்பிரச்சினையின் வடிகாலாக சம~டியின் மாதிரி வடிவங்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே(எதிரி எதையுமே வழங்கத் தயார் இல்லாத நிலையில்) என்ற உபதேசங்கள் செவிப்பறைகளில் முட்டி மோதுகின்ற இவ் வேளைகளில் தராக்கி மேற் கூறிய கருத்து சாத்தியமானதா என்பதை எதிர்கால வரலாற்றுப் பாடங்களில் இருந்து மட்டுமே நாம் கற்றுக் கொள்ளமுடியும். கற்றுத் தருவதற்கும் இப்போது தராக்கி எம்மிடம் இல்லை.<br /><br />தராக்கி அவர்களது வாழ்வுச் சரிதத்தை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விற்றேக்கர் என்பவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அச் சரிதத்துக்கு அவரால் இடப்பட்ட பெயர் “Learning Politics from Sivaram” என்பதாகும்.<br /><br />இப் பேராசிரியர் 1982 களில் மட்டக்களப்பிலே தங்கியிருந்து மட்டக்களப்பு தொடர்பான பண்பாடு, மானுடவியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலேதான் முதன் முதலாக சிவராமைச் சந்தித்து நெருங்கிய நண்பராகிக் கொண்டார். இருவருமே தத்துவவியல் துறை சார்ந்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக விளங்கியதனால் நட்பு மேலும் பலப்பட்டது.<br />பேராசிரியர் மார்க் விற்றேக்கர் அவர்கள் சிவராமின் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்த வேளைகளிலேதான் சிவராமின் சிந்தனைகளையும், முயற்ச்சிகளையும் பதிவு செய்து கொள்வது தனது கடமைகளில் ஒன்று என எண்ணுகின்றார். அதற்கான வேலைத் திட்டங்களை சிவராமின் மன ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் 1997களிலேயே ஆரம்பித்தார்.<br /><br />சிவராமின் உயிருக்குக் குறி வைக்கப்படும் அபாயம் நெருங்கி வந்த வேளையில் எல்லாம் அவனுக்கு வேண்டியவர்கள் அது குறித்த அச்சம் கொண்டவர்களாக அவனை நாட்டை விட்டு இடம் பெயர்க்க முயற்ச்சித்த போதெல்லாம் அதற்கு அடங்காதவனாக, அச்சப்படாதவனாக வெகு சாவகாசமாக அவன் உலா வந்தான். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை.<br /><br />தமிழ் மக்களின் அரசியல் தூதுவனாக உலகத் தலைநகர்கள் எங்கணும் இராஜதந்திரிகளை, புத்திஜீவிகளை அறிவியல் தளத்தில், போரியல் பின்புலத்தில் எதிர்கொண்ட சிவராம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சர்வதேச அரசியல் தாக்கங்களை கணிப்பவனாக இருந்தமையினால் அவனது இழப்பு ஈடு செய்ய முடியாத சமன்பாடாகிறது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-10577549819520157092007-04-27T17:58:00.000+01:002007-04-27T18:01:26.538+01:00பல்கலைக்கழக மாணவர்களை இராணுவப் புலனாய்வாளர்களினால் விசாரணை.வெள்ளி 27-04-2007<br /><br />வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்கு கப்பலில் வரும் மாணவர்களை தெல்லிப்பளையில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணையின் பின்னரே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர் கப்பலில் வரும் மாணவ, மாணவிகள் காங்கேசன்துறையில் இருந்து கப்பலில் இருந்து இறங்கி தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டதும், அங்குவைத்து யாழ்ப்பாணத்திற்கு வந்தமைக்கான காரணம் கேட்டுப் பதியப்படுகின்றது.<br /><br />இதன்போது பல்கலைக்கழக கல்விக்காக வந்ததாக தெரிவித்ததும் குறிப்பிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பற்றிய முழு விபரமும் பெறப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-71144238380482420362007-04-27T17:55:00.000+01:002007-04-27T17:58:07.244+01:00இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrCEE_PwsgMfg3EsTpCNCIMYYl5VxXJng-vNsi164jVvAIvAIx9KRYfz1wl7b02dzUCA-KCNmaJV-UIc4QUlDji-0eo1cauHqVVmL0rfoACf8mbtR74kRl1gD-P79cQWNAKIHpheqndMp-/s1600-h/indea-flag2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5058153018263969090" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrCEE_PwsgMfg3EsTpCNCIMYYl5VxXJng-vNsi164jVvAIvAIx9KRYfz1wl7b02dzUCA-KCNmaJV-UIc4QUlDji-0eo1cauHqVVmL0rfoACf8mbtR74kRl1gD-P79cQWNAKIHpheqndMp-/s320/indea-flag2.jpg" border="0" /></a> <span style="font-size:85%;">வெள்ளி 27-04-2007</span><br /><br />விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.<br /><br />இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.<br /><br />கிï பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்களுக்குள் மத்திய அரசுக்கு மாநில அரசு தெரிவிக்க வில்லை என்றும் கூறி 3 பேரையும் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-22186152172769186272007-04-27T17:38:00.000+01:002007-04-27T17:40:02.467+01:00குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி!<span style="font-size:85%;">வெள்ளி 27-04-2007</span><br /><br />குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர்.<br /><br />சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம்.<br /><br />இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார்.<br /><br />அங்கு போன பின்னர் தனது அக்கா உண்ணாமலையையும் துணைக்கு வைத்துக் கொண்டார் ஆதிலட்சுமி. சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த சீனிவாசன் மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார்.<br /><br />இதனால் கடுப்பாகிப் போன ஆதிலட்சுமி, இதற்கு மேலும் சீனிவாசனிடம் அடி உதை பட்டு அவஸ்தைப்பட விரும்பவில்லை. இதையடுத்து தனது அக்காவுடன் ஆலோசித்தார். அப்போது சீனிவாசனைக் கொன்று விடுவது என இருவரும் முடிவு செய்தனர்.<br /><br />இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் சீனிவாசன். வழக்கம் போல ஆதிலட்சுமியை அடித்து விட்டு தூங்கி விட்டார். நள்ளிரவில் கிரைண்டரில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அதை வைத்து சீனிவாசனை சரமாரியாக அடித்தனர். இதில் தலைநசுங்கி இறந்தார்.<br /><br />பின்னர் உடலை சாக்குப் பையில் வைத்து கட்டினர். காலையில், குடிபோதையில் விஷத்தை சாப்பிட்டு சீனிவாசன் இறந்து விட்டதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.<br /><br />ஆனால் சீனிவாசனின் தாயாருக்குத் தகவல் தெரிந்து அவர் ஓடி வந்தார். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தபோது நடந்தது தெரிய வந்தது.<br /><br />இதையடுத்து ஆதிலட்சுமி, உண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காவுடன் சேர்ந்து கிரைண்டர் கல்லால் கணவரைக் கொலை செய்த ஆதிலட்சுமியால் அப்பகுதி பரபரப்பாகிப் போனது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-68671876787514046712007-04-27T17:20:00.000+01:002007-04-27T17:23:37.961+01:00எமது வான்படையுடன் ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுவிட்டோம் : விடுதலைப் புலிகள்வெள்ளி 27-04-2007<br /><br />தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது. எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்டம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், கடற்படை என்பன இருந்தன. தற்போது வான்படையும் உள்ளது. நாங்கள் தற்போது ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுள்ளோம்.<br /><br />தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும்.<br /><br />எமது கடற்புலிகள் கண்ட வளர்ச்சியைப் போல எமது வான்படையும் வளர்ச்சி அடையும். கடற்புலிகள் ஒரு சில படகுகளுடன் மிகச் சிறு குழுவாகவே தோற்றம் பெற்றிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் கடலின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே எமது வான்படையும் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.<br /><br />விடுதலைப் புலிகள், தமது வான்படை வானூர்திகள் மூலம் சிறிலங்காவின் தென்பகுதியிலும், வடபோர்முனையிலும் மிக உயாந்த பாதுகாப்புக்களை கொண்ட தளங்களின் மீது ஒரு மாதத்தில் இரு தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.<br /><br />இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்துள்ளார்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-62589226232207970992007-04-27T17:17:00.000+01:002007-04-27T17:20:22.614+01:00மன்னாரில் மக்கள் குடியிருப்புகள் மீது வான்குண்டு வீச்சு- எறிகணைத் தாக்குதல்கள்.<span style="font-size:85%;">வெள்ளி 27-04-2007</span><br /><br />மன்னார் பரப்புக்கடந்தான் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள், இன்று தாக்குதலை நடத்தியுள்ளன.<br />இரண்டு கிபீர் வானூர்திகள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மூன்று முறை மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடத்தின.<br /><br />இத்தாக்குதலில் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன. மன்னார் முள்ளிக்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர் எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டன.<br /><br />சிறிலங்கா இராணுவத்தினரின் பின்தளங்களில் இருந்து இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-14432803012659140052007-04-27T17:15:00.000+01:002007-04-27T18:30:08.716+01:00சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவும்: அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtsPA9sjM0spLiP1trZ7ktVbCQRelc-iiXLhgHiizg2XS6tlmu_EIqTS8sSdwAOlF_trBzkLxi8U0kKC42FaZKcwfmhhVtC0GI6kEgVpFd7e_ulK5zXs-nxg62vaFYp-3yqkYyoqVub6LY/s1600-h/humanright.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5058161101392420178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 115px; CURSOR: hand; HEIGHT: 93px" height="185" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtsPA9sjM0spLiP1trZ7ktVbCQRelc-iiXLhgHiizg2XS6tlmu_EIqTS8sSdwAOlF_trBzkLxi8U0kKC42FaZKcwfmhhVtC0GI6kEgVpFd7e_ulK5zXs-nxg62vaFYp-3yqkYyoqVub6LY/s320/humanright.jpg" width="250" border="0" /></a><span style="font-size:85%;">வெள்ளி 27-04-2007</span><br /><br />சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.<br /><br />இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:<br /><br />சிறிலங்காவைப் போல் 20 நாடுகளும் சிறார்களை படையில் பயன்படுத்துவதால் அந்த நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தும் படி நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவை கேட்டுள்ளன.<br /><br />2007 ஆம் ஆண்டுக்கான சிறார் படைச்சேர்ப்பு தடை விதிகளின் படி இராணுவ உதவிகளின் மட்டுப்படுத்தல் அவசியம் என அமெரிக்க செனட் உறுப்பினர்களான றிச்சார்ட் டேர்பன், சாம் பிறவுன்பக் ஆகியோர் கூறியுள்ளனர்.<br /><br />அதற்கு புஸ்சின் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தனர். சில நாடுகள் தமது சொந்தப் படையினருக்காக சிறார்களை படையில் சேர்க்கின்றனர். வேறு சில நாடுகள் சிறார்களை படையில் கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளன.<br /><br />இப்படியான நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, புரூன்டி, சாட், கொலம்பியா, கோட் இவோறி, கொங்கோ, சூடான், உகண்டா ஆகியன அடங்கும்.<br /><br />இந்த நாடுகளுக்கு இராணுவ பயிற்சிகளுக்காக சிறிய தொகையும், ஆயுதக் கொள்வனவுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டொலர்களும் அமெரிக்க அரசினால் இராணுவ உதவிகளாக வழங்கப்படுகின்றன.<br /><br />அமெரிக்க மக்களால் வரியாக செலுத்தப்படும் இந்த பணம் சிறார்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. மேலும் அமெரிக்காவின் ஆயுதங்களும் இந்த சிறார்களின் கைகளில் போய்ச் சேரக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இந்நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபையும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறார் படைச் சேர்ப்பில் சிறிலங்கா, அங்கோலா, புரூண்டி, கொலம்பியா, கொங்கோ, ருவாண்டா, சிரோலியோன், உகண்டா போன்ற நாடுகள் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.<br /><br />அந்த அமைப்பின் அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறார் படை மற்றும் ஆயுதப் பரிமாற்றத்திற்கான திட்டமிடல் முகாமையாளர் கொல்பி குடமான் அறிக்கை:<br /><br />சிறார் படைச்சேர்ப்பை நிறுத்துவதற்கு அழுத்தங்கள் அவசியமானது. எனவே சிறிலங்கா உகண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள ஆயுதப்படைகளில் உள்ள சிறார்களை மீட்பதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தங்களை தமது ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.<br /><br />இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சிறிலங்காவை பாதிக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.<br /><br />ஏனெனில் அது சிறார் படைகளை கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடித் தொடர்புள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளதது. அமெரிக்காவின் இராணுவ உதவிகளை பெற்று வருகிறது.<br /><br />சிறார் படை பாதுகாப்பு திட்டமானது ஐந்து வகையான அமெரிக்க இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகின்றது.<br /><br />- அனைத்துலக படைத்துறை கற்கைநெறி மற்றும் பயிற்சிகள்<br /><br />- வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி<br /><br />- வெளிநாட்டு படைத்துறை விற்பனைகள்<br /><br />- நேரடியான வர்த்தக விற்பனைகள்<br /><br />- மேலதிக பாதுகாப்பு உதவிகள்<br /><br />போன்ற உதவிகள் சிறார் படைச் சேர்ப்பை குறிப்பிட்ட நாடுகள் நிறுத்தும் வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-41429248930310028792007-04-21T11:49:00.000+01:002007-04-21T11:52:25.384+01:00அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை<span style="font-size:85%;">சனி 21-04-2007</span><br /><br />இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.<br /><br />கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த அந்தப் பயங்கரத் தாக்குதல், கடந்த மாதம் 30ம் தேதியன்று உக்கிரத்தை எட்டியது. குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் அன்று சுட்டுக்கொல்லப்பட்டதுதான் அதற்குக் காரணம். மொத்தமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களைக் கொதித்தெழச் செய்துவிட்டது.<br /><br />மீனவர்களின் உயிரைக் காப்பாற்றத் தவறும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மீனவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு, குமரி மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மீனவர்களின் இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., தே.மு.தி.க. உட்பட எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்தன.<br /><br />மீனவர்களின் இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நீடித்ததால், மீனவர்களைச் சமாதானப்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அரசு, அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதோடு ‘தமிழக மீனவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றும் உறுதி அளித்தது. கடலோர பாதுகாப்புக் காவல் படையினரை மத்திய அரசு முடுக்கிவிட்டது. தூத்துக்குடியில் முடங்கிக் கிடந்த ‘நாய்கிதேவி’ என்ற கடலோர ரோந்துக் கப்பல் கடலுக்குள் அவசர அவசரமாக இறக்கப்பட்டு ரோந்து சுற்றத் தொடங்கியது.<br /><br />இந்த நிலையில்தான் கடந்த 11_ம் தேதி, இந்திய எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மீனவர்களையும், மூன்று படகுகளையும் கடலோர காவல்படையினர் பிடித்து தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒரு படகில் ‘மரியா’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.<br /><br />‘மரியா என்று எழுதப்பட்டிருந்த படகில் வந்தவர்கள்தான் எங்களைச் சுட்டார்கள்’ என்று குமரி மாவட்ட மீனவர்கள் முன்பு சொல்லியிருந்ததால், மீனவர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்ட இலங்கையைச் சேர்ந்த மரியா படகிலிருந்த சிங்களர்கள் கடலோர காவல் படையிடம் மாட்டிக் கொண்டார்கள்’ என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸே அந்தச் செய்தியைக் கசியவிட்டது என்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழக மீனவர்களின் மனம் குளிரச் செய்யும் நிலையில் அரசு இருந்ததுதான் என்றும் கூறப்பட்டது.<br /><br />போலீஸ் நினைத்தது போலவே, இங்குள்ள மீனவர்களும் சிங்களர்கள் பிடிபட்டதால் மனம் குளிர்ந்துதான் போனார்கள். அரசுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட மீனவ அமைப்புகள், விளம்பரத்தில் ‘குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்ற சிங்களர்களைப் பிடித்த கடலோர காவல்படையினருக்கு நன்றி’ என்ற வாசகத்தையும் சேர்த்து சந்தோஷப்பட்டார்கள்.<br /><br />ஆனால் ‘மரியா’ படகின் மர்மத்தை மறுநாள் உப்புச்சப்பில்லாமல் செய்துவிட்டார், தூத்துக்குடி எஸ்.பி.யான ஜான் நிக்கல்சன். ‘‘குமரி மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் சுட்டது யார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. மரியா என்ற படகில் வந்தவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையைச் சேர்ந்த சிங்களர்களா? என்பது தெரியவில்லை. பொதுவாக மரியா, மாதா என்ற பெயர்களில் மீனவர்கள் படகு வைத்திருப்பது தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகம். எனவே யாரோ ‘மரியா’ என்ற படகை தமிழ் மீனவர்களைச் சுட தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.<br /><br />அதே நேரத்தில், இப்போது பிடிபட்ட ‘மரியா’ படகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமானதுதான். இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆறு பேர் ‘மரியா’ என்ற படகில் மீன் பிடிக்க வந்திருக்கிறார்கள். அப்போது அந்தப் படகு ரிப்பேர் ஆகியிருக்கிறது. அதனால் அவர்கள் 21 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த வழியாக வந்த குமரி மாவட்ட மீனவர்களிடம் அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழில் பேசியதால், அவர்களைத் தங்களது படகுகளில் ஏற்றியிருக்கிறார்கள் குமரி மீனவர்கள். அப்போதுதான் அந்த மூன்று படகுகளையும் (குமரி மீனவர்கள் கொண்டு சென்றது இரண்டு படகுகள்) கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்து வந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்படுகிறார்கள்!’’ என்று ‘மரியா’ படகு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அவர்.<br /><br />இது குறித்து நம்மிடம் கருத்துத் தெரிவித்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘‘தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வது இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இதை மறைக்கப் பார்க்கிறது. இப்போது பிடிபட்டிருக்கும் மரியா படகில் கூட ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது. முதலில் அந்தப் படகில் இருந்து ஆயுதங்கள் பிடிபட்டதாகச் சொன்னார்கள். இப்போது அதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள். கடைசியில் அது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.<br /><br />நடுக்கடலில் 21 நாட்கள் அவர்கள் தத்தளித்ததாகக் கூறுகிறார்கள். 21 நாட்கள் காணாமல் போனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏன் தேடவில்லை என்று தெரியவில்லை. மற்றும் அதில் இருந்த ஆயுதங்கள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்தவுடன், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள் போலீஸ் வசம் வந்ததும், ஒரே நாள் இரவில் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் எங்களுக்கு இதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.<br /><br />இதை நாங்கள் விட்டுவிடப்போவதில்லை. சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட (கடலோர காவல் படையிடம் சிக்கிய மீனவர்கள்) மீனவர்களிடம் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கப் போகிறோம். போலீஸ் சொல்வதுதான் உண்மையா? அல்லது போலீஸ் அவர்களை அப்படி சொல்லச் சொன்னதா என்று கேட்போம். அதில் ஏதாவது முன்னுக்குப் பின் முரணாகச் செய்திகள் வந்தால், அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்!’’ என்றார்கள் அவர்கள்.<br /><br />KumudamR. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-65180038030010753982007-04-21T11:44:00.000+01:002007-04-21T11:47:31.294+01:00நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர் சுட்டுக் கொலை கொலையாளியும் தற்கொலை.சனி 21-04-2007<br /><br />அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<br /><br />உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.<br /><br />இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.<br /><br />அந்த நபர் இருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பெண் நாசா ஊழியர் மற்றும் ஒரு பொறியாளரை அந்த நபர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார்.<br /><br />ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்புப் படையினர் அந்த நபரை நெருங்கியதால், பீதியடைந்த அந்த நபர் பிணையக் கைதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிணையக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண் எந்த விதக் காயமும் இன்றித் தப்பினார்.<br /><br />எதற்காக அந்த காண்ட்ராக்ட் ஊழியர் இந்த தாக்குதலை நடத்தினார் என்று தெரியவில்லை.<br /><br />சில நாட்களுக்கு முன்புதான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்கு 32 பேர் பலியானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாசாவுக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-68619443457231183402007-04-19T10:08:00.000+01:002007-04-19T10:11:51.971+01:00திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா?வியாழன் 19-04-2007<br /><br />இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது.<br /><br />இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை.<br /><br />அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன.<br /><br />இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்துகொள்கின்றது என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசுப்படைகள், அவற்றின் கீழ் இயங்கும் துணைப்படைகள் போன்றவையும் இந்தக் கொடூரத்தை இழைக்கின்றன என்றும் அவற்றுக்கு அரசுத் தலைமையின் ஆசியும், அங்கீகாரமும் உண்டு என்றும் திடுக்கிடும் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.<br /><br />அரசுப் பின்புலத்தோடு அரங்கேறும் இக்கொடூரங்களை நேரடியாக அனுபவித்து வருகின்ற தமிழர்களுக்கு, இவற்றின் "சூத்திரதாரிகள்' யார் என்பது நன்கு தெரியும்.<br /><br />அதே சமயம்அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் "மனித உரிமைகள் கண்காணிப்பகம்', லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் "சர்வதேச மன்னிப்புச்சபை' மற்றும் "ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு' போன்றவை எல்லாம் கூட இந்த மனித உரிமை மீறல் கொடூரம் குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.<br /><br />சட்ட ரீதியான இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசே, இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது என்ற உண்மையை உலகின் மனித உரிமைக் காவலர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.<br /><br />இந்த உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.<br /><br />திருகோணமலையில் ஐந்து அப்பாவி மாணவர்களின் படுகொலைகளின் பின்னணியை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக "சுடர் ஒளி' யின் அப்பிரதேசச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டார். இப்படி இன்னும் பலப்பல.<br /><br />நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இத்தகைய மோசமான உரிமை மீறல்கள் குறித்துக் குரல் எழுப்பும்போது, ""உங்கள் கட்சி உறுப்பினர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்களா? நீங்கள் ஏன் ஆரவாரம் செய்கின்றீர்கள்? '' என்று இடக்குக் கேள்வி எழுப்புகின்றனர் ஆட்சியாளர்கள்.<br /><br />இவ்வாறு இலங்கை ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல் அராஜகம் சர்வதேச மட்டத்தில் பறைசாற்றப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான், உலகக் கிறிஸ்தவர்களின் ஒப்புயர்வற்ற திருத்தந்தை பதினெட்டாவது ஆசீர்வாதப்பர், நாளை இலங்கை அரசுத் தலைவரை நேரில் சந்தித்து அவருக்கு ஆசீர்வாதம் வழங்க இருக்கின்றார்.<br /><br />இந்தச் சந்திப்புத் தொடர்பாக நியூயோர்க்கிலிருந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் லண்டனிலிருந்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியன ஏற்கனவே திருத்தந்தைக்கு முக்கிய மடல்களை அனுப்பி வைத்திருக்கின்றன.<br /><br />இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் படைகளால் அண்மைக்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல் மதகுருமாரும் அதுவும் திருத்தந்தையின் கத்தோலிக்க மத பீடத்தின் பங்குத்தந்தை கூட இலக்காகியுள்ளார் என்ற உண்மையை மேற்படி சந்திப்புக்கு முன்னர் கடிதம் மூலம் திருத்தந்தைக்கு நினைவூட்டியிருக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.<br /><br />இலங்கைக் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் மிரட்டலுக்கு இலக்காகியிருந்த யாழ். அல்லைப்பிட்டிப் பிரதேச பங்குத்தந்தை வண. பிதா ஜிம் பிறவுண் அடிகளார், கடந்த ஓகஸ்டில் கடற்படையின் சோதனைச் சாவடியில் வழி மறிக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் காணாமற் போயிருக்கின்றமையையும் அந்த அமைப்பு திருத்தந்தைக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.<br /><br />இந்தச் சமயத்திலேயே இலங்கை ஜனாதிபதி திருத்தந்தை சந்திப்பு நாளை வத்திக்கானில் இடம்பெறுகின்றது.<br /><br />இச்சந்திப்பை ஒட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம், திருத்தந்தையிடம் விடுத்திருக்கும் அதே வேண்டுகோளை ஈழத் தமிழர்கள் சார்பில் நாமும் திருத்தந்தையிடம் முன்வைக்க விழைகிறோம்.<br /><br />கோரப்படுகொலை அராஜகத்துக்கு தங்கு, தடையின்றி, சட்டக்கட்டுப்பாடு ஏதுமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆட்கடத்தல், அச்சுறுத்திக் கப்பம் பெறல், ஆட்களைக் காணாமற் போகச் செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு தமிழர் விரோதக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்துங்கள் என்றே திருத்தந்தையை நாம் இறைஞ்சுகின்றோம்.<br /><br />"நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கின்ற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்''(மத்தேயு 7 ஆம் அதிகாரம், 2ஆம் வசனம்) என்ற உண்மையை இலங்கை அதிபருக்கு எடுத்துரையுங்கள் திருத்தந்தையே!<br />உங்கள் தரிசனமும், ஆசீர்வாதமும், நற்போதனைகளுமாவது இலங்கைத் தலைமையை நீதி செய்ய நியாயமாக நடக்க நல்வழியில் செயற்பட ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய ஆதங்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம்.R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8515435256078074117.post-80204603521848245832007-04-18T12:50:00.000+01:002007-04-18T11:54:14.520+01:0015.04.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "நிலவரம்" ஆய்வு நிகழ்வு<embed id="'mediaPlayer'" pluginspage="'http://microsoft.com/windows/mediaplayer/en/download/'" src="http://www.pathivu.com/files/nilavaram/nil150407.wmv" width="585" height="480" type="'application/x-mplayer2'" loop="true" designtimesp="'5311'" autostart="true" videoborder3d="'-1'" showstatusbar="'-1'" showdisplay="'0'" showtracker="'-1'" showcontrols="true" bgcolor="'darkblue'" autosize="'-1'" displaysize="'4'"></embed><br /><br /><br /><br /></object>R. கரன்http://www.blogger.com/profile/06799522934989510699noreply@blogger.com0