பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல்
ஞாயிறு 23-09-2007
விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது.
சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளை கடுமையாக கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.
ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home