விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கோத்தபாய!
ஞாயிறு 23-09-2007
சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் இன்று ஐலண்ட பத்திரிகைக்கு தெரிவித்த செவ்வியில் விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு திரும்பும் பட்சத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கையினை மேற்கொள்ளமாட்டார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டபாய ராஜபக்ஸ சிலதினங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்ற செயல் எனவும் இராணுவத்தீர்வின் மூலமே தீர்வு எய்தப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது நியூயோர்க் நகரில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடரில் சிறீலங்கா ஜனாதிபதி பேசவிருக்கும் இத்தருணத்தில் கோத்தபாய இவ்வாறு குத்துக்கரணமடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகவும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home