Monday, May 21, 2007

பல் கலைக்கழக பாதுகாப்பு ஊழியருக்கு எச்சரிக்கை: போடப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டது.

திங்கள் 21-05-2007

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களுக்கு நள்ளிரவு நேரம் உந்துருளியில் வரும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஆயுத ஒட்டுக்குழுவினால் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த இராணுவத்தினர் மற்றும் ஆயுத ஓட்டுக் குழுவினர் பல்கலைக்கழக ஊழியரைத் தாக்கியதுடன் கிழக்கு மாகாண மக்களின் துயர்துடைப்பு நிதி உண்டியலையும் உடைத்து பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்தும் சென்று இருந்தார்கள்.

இது சம்பந்தமாக குறிப்பிட்ட பாதுகாப்புக் கடமையில் இருந்த ஊழியர் இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுசரனையுடன் செய்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நள்ளிரவு நேரம் குறிப்பிட்ட நபர் கடமையில் இருந்து வேளையில் பல்கலைக்கழக பின்புற மதில் பாய்ந்து உள்ளிறங்கிய குறிப்பி;ட்ட குழுவினர் குறிப்பிட்ட பாதுகாப்பு அலுவலரின் தேசிய அடையாள அட்டை உட்பட அனைத்து அடையாள அட்டையையும் பறித்துக் கொண்டு உடனடியாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மீளப் பெறவேண்டும் எனவும் இல்லதுவிட்டால் கொலை செய்யப்படுவார் என்று பயமுறுத்தியதைத் தொடர்ந்து செய்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் இரவில் கடமை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகி வருகின்றமையால் கடமையைச் செய்ய முடியாத நிலமைக்குள் காணப்படுகின்றார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home