Friday, March 2, 2007

வவுனியாவில் உயர்பாதுகாப்பு பகுதியில் கிளைமோர் தாக்குதல்.

வெள்ளி 02-03-2007

வவுனியா சிறிலங்காப் படையினரின் உயர்பாதுகாப்பு பகுதியான ஈரப்பெரியகுளத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையத்தில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலின் போது காவல்துறையினரின் நிலையில் காவல்துறையினர் இருவரும் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் காவல் கடமையில் இருந்தனர்.

இவர்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவரும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருமாக இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும் அடங்கிய யோசப் தளத்துக்கு முன்பாக அதிஉயர் பாதுகாப்புக்களுடன் ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையம் உள்ளது. தெற்கு நோக்கிப் பயணிப்பவர்கள் சோதனையிடப்படும் முதன்மைச் சோதனை நிலையம் ஈரப்பெரியகுளத்தில் ஏ-9 சாலையில் அமைந்துள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home