Sunday, February 25, 2007

தமிழகத்தில் கைதானவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதிகோரும் இலங்கை.

வீரகேசரி

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனஇந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அதிகாரிகளால் கடந்த வாரம் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தவே இந்திய அரசிடம் இலங்கை அனுமதி கோரியுள்ளதாக தெரியவருகிறது.

கடற்புலிகளுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் படகொன்றை கடந்த 13 ஆம் திகதி நடுக்கடலில் வழிமறித்த இந்திய கடலோர காவற் படையினர் அதிலிருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் உட்பட ஐவரையும் கைது செய்து தமிழக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home