Monday, February 26, 2007

சீனாவிடம் இருந்து ஆயுத தளபாட உதவிகளை பெருமளவில் எதிர்பார்ப்பு.

திங்கள் 26-02-2007

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சீனாவிடம் இருந்து ஆயுத தளபாட உதவிகளை பெருமளவில் எதிர்பார்பதாக இராஜதந்திர வட்டாரங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன

இலங்கiயின் அயல் நாடான இந்தியா ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்களை வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது

இந்த நிலையில் பாகிஸ்தானையே பிரதான விநியோகிப்பாளர்களாக கொண்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் படைத்துறையும் பாகிஸ்தானிடம் இருந்து அண்மையில் பெற்றுக் கொண்ட ஆயுத தளபாடங்களில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் செயலற்ற தன்மை காரணமாக தமது பிரதான விநியோகஸ்தராக சீனாவை தெரிவு செய்ய தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஸ்ரீலங்காவும் சீனாவும் பௌதத்தை தமது பிரதான மதமாக கொண்டுள்ளமையால் பௌத்த நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அடிப்படையில் ஆயுத தளபாட உதவிகளை அதிகளவில் பெற முடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆசிய நாடுகளின் வல்லரசாக திகழும் சீனாவின் ஒத்துழைப்பை பெற்று தமது இராணுவ நடவடிக்கைகளை தொடர ஸ்ரீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையிலா குழுவினரின் முக்கிய நோக்கம் சீனாவிடம் இருந்து படைத்துறை உதவிகளை அதிகளவில் பெறுவதே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை உலகளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தோன்றி வரும் நிலைப்பாடுகளை முறியடிப்பதற்கான இராஜதந்திர உதவிகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்கக்படுகின்றது

வீற்றோ அதகாரம் கொண்ட ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான சீனா ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐநாவில் கெர்டு வரப்படும் தீர்மானங்களை இரத்துச் செய்யும் வகையிலான உடன்பாட்டையும் சீனாவுடன் மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தவுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ன.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home