Wednesday, February 28, 2007

ஏறாவூரில் குடும்பஸ்தர் இறந்து காணப்பட்டுள்ளளார்.

புதன் 28-02-2007

ஏறாவூர் காவல்துறையினர் இளம் கட்டடி தொழில் புரியும் குடும்பஸ்தர் ஒருவரை தலவை-புன்னைச்சோலை வீதியில் சூட்டுக்காயங்களுடன் செவ்வாய் காலை கண்டெடுத்துள்ளார்கள்.

இவர் 31 அகவையுடைய செல்வராசா சிவநாதன் எனவும் செங்கலடி ஐயங்கேணி பாரதி கிராமத்தை சேர்ந்தவர் இவரது மனைவி மத்திய கிழக்கு பகுதியில் பணிபுரிபவர் எனவும் தெரியவருகிறது.

சுpவநாதன் தனது தாயாரிடம் வேலைக்கு செல்வதாக கூறி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு சென்றதாகவும் அதன்பின் அவர்வீடு திரும்பவில்லை எனவும் இவரது உறவினர்கள் இவரை தேடுயதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் காவல்துறையினர் இவரது உடலத்தை புன்னைச்சோலைப் பகுதியில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home