Monday, February 26, 2007

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் சுட்டுக்கொலை

Monday February 26 2007 [maalaimalar.com]

இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அவர்கள் மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தத்தளிக்க விட்டனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களின் 60 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீன வர்கள் 6 பேர் ஒருவிசை படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அருணாச்சலம் என்பவருக்குக்கு சொந்தமான `அம்மை என்ற படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கலியபெருமாள் (வயது55), அஜீஸ்குமார் (19), ரமணன், ராமலிங்கம், செல்வமணி, காரைக்காலை சேர்ந்த அன்பழகன் ஆகி யோர் கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங் கை கடற்படையினர் துப்பாக் கியால் சுட ஆரம்பித்தனர்.

இதைக் கண்டதும் உயிருக்கு பயந்த மீனவர்கள் 6 பேரும் கையை மேலே உயர்த்தியபடி நின்றனர். இருந்த போதி லும் கடற்படையினர் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர்.

அப்போது அவர்கள் சுட்ட குண்டு ஒன்று மீனவர் கலியபெருமாளின் மார்பில் பாய்ந்தது. இதனால்அவர் அந்த இடத்திலேயே படகில் சாய்ந்து விழுந்தார்.

மற்றொரு குண்டு மீனவர் அஜீஸ்குமாரின் காலில் பாய்ந்தது.

காயம் அடைந்த 2 மீன வர்களையும் பார்த்தமற்ற மீனவர்கள் படகை உடனடியாக கரையை நோக்கி திருப்பினர். மீனவர்கள் 6 பேரும் இன்று காலை 7 மணி அளவில் கரைதிரும்பினர்.

துப்பாக்கி சூடுகுறித்து மீனவர்கள் கரைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கரையில் ஆம்புலன்ஸ் வண்டி தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

மீனவர்கள் கரையை அடைந்ததும் காயம் அடைந்த 2 மீனவர்களையும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மீனவர் கலிய பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் காயம் அடைந்த அஜீஸ்குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் நாகை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மற்றும் மீனவர்கள் குவிந்தனர்.

இலங்கை கடற்படையினர்களின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் அவர்கள் கோஷம் எழுப் பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிக்கப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் அருள்தாஸ் என்ற மீனவர் காயம் அடைந்தார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்வியோடு தமிழக மீனவர்கள் உள்ளனர்.

மேலும் இதற்கு பயந்து கடலுக்குச் செல்லாமல் இருந்தால் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்றும் மீனவர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home