மட்டக்களப்பில் ஆட்டிலறி தாக்குதலில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உட்பட 12 பேர் காயம்.
செவ்வாய் 27-02-2007
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் ஏழு பேர் பயணம் செய்த ஹெலிகொப்டரை இலக்கு வைத்து மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆட்லறி தாக்குதலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இத்தாலிய தூதுவர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரும், தூதுவர்களும் பயணம் செய்த ஹெலிகொப்டர் மட்டக்களப்பு விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய வேளை இவ் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விஷேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே எமது செய்தியாளருக்கு தெரிவித்தார்..
இத் தாக்குதலில் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேரும், பொலிஸார் மூன்று பேர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தில் காமயடைந்த தூதுவர்கள் இருவரிற்கு காயங்கள் ஏதும் பெரிதாக இல்லையெனவும், பொலிஸார் மாத்திரம் படுகாமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்..
தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டரில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர் உட்பட ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கான தூதுவர்களும் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமøயில் முப்படையினதும் உயரதிகாளின் கூட்டமொன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இத் தாக்குதலையடுத்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள மேலும் தெரிவித்தன..
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home