Monday, March 5, 2007

யாழ்பாணத்தில் வாகன விபத்தில் இரு இராணுவம் பலி.

திங்கள் 05-03-2007

கடந்த சனிக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் குறும்பைசிட்டிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் தொடரணியின் ஒரு அங்கமாக பயணித்த வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிபதி திருமதி. சறோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டுள்ளார். இராணுவத் தொடரிணி கிளைமோர் அச்சத்தில் வேகமாக பயணித்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது நடைபெற்றுள்ளது.

நீதிபதி உடலங்களை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் பிரேதபரிசோதனைக்காக கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home