Monday, March 5, 2007

இரு கருணா கூலிக்குழு உறுப்பினர் காயம்.

திங்கள் 05-03-2007

நேற்று ஞாயிறு இரவு 7.05 மணியளவில் மட்டக்களப்பு மயிலம்பவே சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அடுத்திருக்கின்ற திருமலைவீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருகருணா கூலிக்குழு உறுப்பினர்களும் மற்றும் அச்சமயம் பாடசாலை கட்டிடத்திற்கு அருகில் நின்ற நான்கு இடம்பெயர்ந்த பொதுமக்களும் காயமமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் ஆறுவரும் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கூலிக்குழு முகாமானது சிறீலங்கா இராணுவமுகாமிற்கு அப்பால் 100 மீற்றர் தொலைவில் ஒரு வீட்டில் இருந்ததாகவும் 15நிமிடநேர தாக்குதலில் அது முற்றாக தகர்க்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களில் ஒரு பெண்ணும் மற்றும் மூவருமே காயமடைந்ததாக தெரியவருகிறது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home