ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விவாதம்: மனோ கணேசன்.
ஞாயிறு 25-02-2007
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அடுத்த மாதம் இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப் பிரச்சினைக்கான செயற்குழுவின் விவாதங்களில் இலங்கைப் பிரச்சினையும் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
ஆட்கடத்தல், கொலைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் குறித்த ஆய்வறிக்கையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. எங்களது ஆட்சியாளர்களும் ஆய்வைப் பார்வையிடுவர். எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் எங்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் குழுவின் இயக்குநரான லூயிஸ் ஆர்பர் உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்ற உறுப்பினர்கள் இலங்கையில் அனைத்துலக மனித உரிமை அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home