Saturday, February 24, 2007

உணவுத் தட்டுப்பாட்டை மறைக்க அரச அதிகாரிகள் முயற்சி.

சனி 24-02-2007

யாழ் குடாநாட்டில் தற்போதும் உணவுத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக கோதுமை மா வழங்கப்படாமையால் பாணுக்கும் கூட தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு நேற்று கோதுமை மா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கூட மட்டுப்படுத்திய அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு போதுமானதென தெரிவிக்கப்பட்ட போதிலும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியளவுக்கு மா வழங்கப்படவில்லை.

இந்த நிலமையில் தற்போது மீண்டும் தனியார் வர்த்தகர்களுக்கு பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் யாழ் செயலக திட்டமிடற் பிரிவு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் வெளியில் தனியார் வர்த்தக நிலையங்களிலும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சர்வதேசத்திற்கு ஒரு மாயைத் தோற்றத்தை காட்ட அரச அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையின் மூலம் முனைந்து நிற்கின்றாhகள் எனப்பலரும் தெரிவிக்கின்றார்கள்.

பல நோக்புக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் மட்டுப்படுத்திய பொருட்களை வழங்கிவிட்டு தனியார் வியாபாரிகளுக்கு பொருட்களை வழங்கி யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லையெனக் காட்ட முயற்சிப்பதாக கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தாம் கேட்கும் அளவுக்கு உரிய பொருட்கள் எவையும் வழங்கப்படாததுடன் தம்மை மட்டுப்படுத்திய அளவில் மட்டும் பொருட்களை வழங்கும் படியும் மேலதிகமான ஒரு தொகுதி பொருட்களை தனியார் வர்த்தர்களிடம் வழங்கும் படியும் தமக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகும் தெரிவிக்கின்றார்கள்.

இதன் மூலம் தாம் தொடர்ந்து நட்டம் அடைய வேண்டியுள்ளதுடன் பொது மக்களும் ஒரு பொருளை இரண்டு இடங்களில் பெற வேண்டிய அவல நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் பொது மக்களும் தெரிவிக்கின்றார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home