இந்தியாவில் நடைபெற்ற கார் பந்தயம்; இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
.
இலங்கை - இந்திய அணிகளிடையே கோவையில் நடந்த கார் பந்தயத்தில் இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. மெக்கோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இலங்கை - இந்திய கார் பந்தய வீரர்களுக்கிடையே சிநேகபூர்வ போட்டி கோவை செட்டிபாளையம் `கரி மோட்டார் ஸ்பீட்வே'யில் நேற்று முன்தினம் நடந்தது.
இலங்கை - இந்திய வீரர்கள் 11 பேர் போட்டியில் பங்கேற்றனர். பரபரப்பாக நடந்த போட்டியில் முதல் ஐந்து சுற்றுக்கு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு காரை ஓட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர்களை விட, இலங்கை வீரர்கள் குறைந்த நேரத்தில் மிக வேகமாக காரை ஓட்டினர்.
இந்தியாவிலிருந்து அகினேனி பிரசாத், கௌரவ் தலால், ரொமானி டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஜேர்மனி வீரர் கார்மர் கிறிஸ்ரியன் இந்தியாவுக்காக போட்டியில் பங்கேற்றார்.
இலங்கை அணி சார்பில் ஷிராரா ஜெயவர்தன, தினேஷ் ஜெயவர்தன, ரிகாஷ் காலித், ரொஹான் டி சில்வா, பெரி பொன்னம்பலம், அகமது ரியாஷ் பாரூக், நவின் குணசேகர ஆகியோர் பங்கேற்றனர்.
பத்து சுற்றுகள் கொண்ட முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:
இலங்கையைச் சேர்ந்த ரொஹான் டி சில்வா, தினேஷ் ஜெயவர்தன. இந்தியாவைச் சேர்ந்த அகினேனி ஆனந்த் பிரசாத்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home