திருகோணமலையில் மூவர் சுட்டுக்கொலை.
வியாழன் 22-02-2007
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ஒருவரும் நகரப்பகுதியில் வைத்து இருவரும் நேற்றைய தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.இதில் ஒரு யுவதியும் இரு ஆண்களும் அடங்குவர்.சுட்டுக்கொல்லப்பட்ட யுவதி நேற்று இரவு வீட்டிலிருந்த போது இரு மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் குறிப்பிட்ட யுவதியை வீட்டுக்கு வெளியில் வைத்து சுட்டுக்கொண்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் ப.சிவதர்சினி (33) ஆவார்.இதேவேளை நேற்று மாலை அன்புவெளிபுரம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதியான பொன்னன் மகேந்திரன் (28) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.அத்துடன் நேற்று இரவு 7.30 தம்பலகாமம் பகுதியில் வைத்து சின்னத்தம்பி தவபாலன் (51) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவ் மூன்று உடல்களும் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home