Saturday, February 24, 2007

யாழில் இராணுவ சுற்றி வளைப்புகள்.

சனி 24-02-2007

யாழ்ப்பாணம் இன்று காலை முதல் கோண்டாவில், தாவடி, இணுவில், தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதிகள் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தேடதலுக்கு உட்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் காலையில் 6.00 மணியளவில் வீடு வீடாகச் சென்று இராணுவத்தினர் சோதனையிட்டதுடன் இளைஞர் யுவதிகளின் அடையாள அட்டைகளையும் வாங்கிச் சோதனையிட்டார்கள்.

காலையில் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழில் நிலையங்களுக்குச் சென்றவர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாத நிலமை காணப்பட்டது. வீதிகளினால் சென்ற இளைஞர் யுவதிகளும் கூட இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் உடற் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home