பல்கலைக்கழக மாணவர் படுகொலை: வன்னியில் நாளை துக்க நாள்.
வியாழன் 22-02-2007
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் நாளை வெள்ளிக்கிழமை (23.02.07) துக்க நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறை இறுதியாண்டு மாணவரான கிருஸ்ணன் கமலதாஸ் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து துக்க நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
கல்விச் சமூகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு முழுமையான துக்க நாள் கடைப்பிடிக்குமாறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அனைத்து தமிழ் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
துக்க நாளில் கண்டன மனுக்களும், மாணவர்களினால் கையளிக்கப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home