Thursday, February 22, 2007

தமிழ்மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கோரி யேர்மனிய அரசிற்கு தமிழ் அமைப்புகள் கடிதம்.

வியாழன் 22-02-2007

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதும் அமுலிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சிறீலங்கா அரசு தமிழ்மக்களை படுகொலைசெய்வதிலும் போக்குவரத்து பாதைகளை மூடி தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து வருகின்றது.

சிறீலங்கா அரசின் இச்செயலை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து யேர்மன் தமிழ்பெண்கள் அமைப்பு தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மற்றும் யேர்மனிய தமிழ் அமைப்புக்கள் யேர்மனிய அரசிடமும் யேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home