100 பிரதிநிதிகளுடன் மகிந்த சீனாப் பயணம்.
[ஞாயிறு 25-02-2007]
சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்தும் நோக்குடன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 40 தொழிலதிபர்கள் உட்பட 100 பேர் கொண்ட குழுவுடன் சீனாவிற்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட விமானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்கு பயணமாகும்.
இக்குழுவில் 15 அமைச்சர்களும் உள்ளனர். இருதரப்பு வர்த்தக உடன்பாடுகள், பொருளாதார இணக்கப்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல் போன்றனவற்றை நோக்காகக்கொண்ட இப்பயணத்தில் சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவின் 50 ஆவது ஆண்டு நிறைவு தினமும் கொண்டாடப்பட உள்ளது.
தொழிலதிபர்களின் குழு வர்த்தக மற்றும் தொழிற்சங்க சபைத் தலைவர் நவாப் ராஜப்டீன் தலைமையில் சுசந்த ரட்னாயக்க (ஜோன் கீல்ஸ்), திலக் டீ சொய்சா (ஏ.எம்.டபிள்யூ), தம்மிக்க பெரேரா (றோயல் செரமிக்), சிசிலி கொத்தலாவல (சிலிங்கோ குறூப்), கே.ஜே.தர்மதாச (நவலோக்கா), சுமல் பெரேரா (அக்சஸ் குறூப்), அஸ்லாம் ஓமார் (பிரண்டிக்ஸ் காமன்ஸ்), ரவி விஜயரட்ன (கிரே லைன்) ஆகியோரை கொண்டுள்ளது.
அமைச்சர் குழுவில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறீசேன, தினேஸ் குணவர்த்தன, ரோகித போகல்லாகம, சரத் அமுனுகம, ஏ.எச்.எம். பௌசி, அனுரா பிரியதர்சன யாப்பா, டலஸ் அழகப்பெருமா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பி.சந்திரசேகரன், பிராந்தியங்கள் விவகார மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களான பாண்டு பண்டாரநாயக்க, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் அரச தலைவருடன் பயணிக்கின்றனர்.
அதேசமயம் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, கேகாலை, காலி ஆகிய பிராந்தியங்களின் வர்த்தக சங்க உறுப்பினர்களும் இக்குழுவில் அங்கம் வகிப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயணத்தின் பிரதான நோக்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அபிவிருத்தித் திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதினம்.கொம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home