Wednesday, April 18, 2007

பொதுமக்களின் இழப்புகளை ஆவணப்படுத்தல்


வடக்கு கிழக்கு புள்ளிவிபர மையம்
Statistical Centre for North East

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைதீவில் நடைபெற்று வரும் இன ஓடுக்குமுறையால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவு நெருக்கடிகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய இழப்புகள், அழிவுகள், நெருக்கடிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி ஆவணப்படுத்திக்கொணடிருக்கின்றோம்.

1. படுகொலைகள்

2. கடத்தப்பட்டு காணமல் போனவர்கள்

3. கைது செய்யப்பட்டு காணமல் போனவர்கள்

4. மனிதாபிமானமற்ற சித்திரவதைகள்

5. கொலை அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும்

6. வாழ்க்கை துணையை இழந்தவர்கள்

7. பெற்றோரை இழந்தவர்கள்

8. பாலியல் வன்முறைகள்

9. விமானத்தாக்குதல்கள்

10. எறிகணைத்தாக்குதல்கள்

11. இராணுவ முகாங்கள், உயர் பாதுகாப்பு வலையங்களினால் பாதிக்கப்பட்டவர்கள்

12. திட்டமிட்ட நில சூறையாடல்கள்

13. காயமடைந்து அங்கவீனமானவர்கள்


மேற்குறிப்பிடப்பட்ட பாதிப்புகளுக்கு


• நேரடியாக முகம் கொடுத்தவர்கள்

• தமது உறவுகளுக்கு நேர்ந்ததை அறிந்தவர்கள்

• நேரில் கண்டவர்கள்

• இவை பற்றி அறிந்தவர்கள்


போன்றவர்கள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்கு தங்களிடம் உள்ள
தகவல்களையும், அனுபவங்களையும் ஆதாரபூர்வமாக தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

“இது ஓர் வரலாற்று பெறுமதியான பணியாக மேற்கொள்ளப்பட்டுக்கொணடிருப்பதால்
ஒவ்வொறுவரும் தமது சிரமங்களைப் பாராது மனப்ப+ர்வமாக ஒத்துழைப்புகளை
வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.”

குறிப்பு : “மரணசான்று பத்திரம், மரண விசாரணை அறிக்கைகள்
மனிதஉரிமைகள் ஆணைக்குழு, ICRC, சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றின் சான்று துண்டு, சமாதான நீதவான், கிராமசேவையாளர், பிரதேச செயலளர் போன்றவர்களின் உறுதிப்படுத்தல்கள்,
பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படம், பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்கள்,
சத்தியக்கடதாசி என்பன இருப்பின் இணைத்து அனுப்பவும்”.

தகவல்கள் அனுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல் : snepvtltd@gmail.com
தொலைபேசி : 0094212283952 தொலைநகல் : 0094212283952

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home