யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு.
ஞாயிறு 15-04-2007
யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீலங்காப் படையினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்.
வீதிகளிலும், ஏனைய பிரதேசங்களிலும் இளைஞர்களோ, ஏனையவர்களோ ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் உந்துருளி அணியினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home