Tuesday, April 17, 2007

கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம்.!!

செவ்வாய் 17-04-2007

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது:

நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன்.

மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி அரச தலைவர் சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடமும், உள்ளுர் அதிகாரிகளிடமும் பணித்திருந்தார்.

கருணா குழுவினரால் முஸ்லிம் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று வருவதை காட்டுகின்றது. இது தற்போது நடைபெற்று வரும் மோதல்களை மற்றுமொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் என்றார் ரவூப் ஹக்கீம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home