மன்னாரில் மக்கள் குடியிருப்புகள் மீது வான்குண்டு வீச்சு- எறிகணைத் தாக்குதல்கள்.
வெள்ளி 27-04-2007
மன்னார் பரப்புக்கடந்தான் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள், இன்று தாக்குதலை நடத்தியுள்ளன.
இரண்டு கிபீர் வானூர்திகள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மூன்று முறை மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன. மன்னார் முள்ளிக்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர் எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டன.
சிறிலங்கா இராணுவத்தினரின் பின்தளங்களில் இருந்து இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home