Friday, April 27, 2007

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவும்: அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்

வெள்ளி 27-04-2007

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்காவைப் போல் 20 நாடுகளும் சிறார்களை படையில் பயன்படுத்துவதால் அந்த நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தும் படி நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவை கேட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டுக்கான சிறார் படைச்சேர்ப்பு தடை விதிகளின் படி இராணுவ உதவிகளின் மட்டுப்படுத்தல் அவசியம் என அமெரிக்க செனட் உறுப்பினர்களான றிச்சார்ட் டேர்பன், சாம் பிறவுன்பக் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதற்கு புஸ்சின் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தனர். சில நாடுகள் தமது சொந்தப் படையினருக்காக சிறார்களை படையில் சேர்க்கின்றனர். வேறு சில நாடுகள் சிறார்களை படையில் கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளன.

இப்படியான நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, புரூன்டி, சாட், கொலம்பியா, கோட் இவோறி, கொங்கோ, சூடான், உகண்டா ஆகியன அடங்கும்.

இந்த நாடுகளுக்கு இராணுவ பயிற்சிகளுக்காக சிறிய தொகையும், ஆயுதக் கொள்வனவுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டொலர்களும் அமெரிக்க அரசினால் இராணுவ உதவிகளாக வழங்கப்படுகின்றன.

அமெரிக்க மக்களால் வரியாக செலுத்தப்படும் இந்த பணம் சிறார்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. மேலும் அமெரிக்காவின் ஆயுதங்களும் இந்த சிறார்களின் கைகளில் போய்ச் சேரக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபையும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறார் படைச் சேர்ப்பில் சிறிலங்கா, அங்கோலா, புரூண்டி, கொலம்பியா, கொங்கோ, ருவாண்டா, சிரோலியோன், உகண்டா போன்ற நாடுகள் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறார் படை மற்றும் ஆயுதப் பரிமாற்றத்திற்கான திட்டமிடல் முகாமையாளர் கொல்பி குடமான் அறிக்கை:

சிறார் படைச்சேர்ப்பை நிறுத்துவதற்கு அழுத்தங்கள் அவசியமானது. எனவே சிறிலங்கா உகண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள ஆயுதப்படைகளில் உள்ள சிறார்களை மீட்பதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தங்களை தமது ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சிறிலங்காவை பாதிக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் அது சிறார் படைகளை கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடித் தொடர்புள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளதது. அமெரிக்காவின் இராணுவ உதவிகளை பெற்று வருகிறது.

சிறார் படை பாதுகாப்பு திட்டமானது ஐந்து வகையான அமெரிக்க இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகின்றது.

- அனைத்துலக படைத்துறை கற்கைநெறி மற்றும் பயிற்சிகள்

- வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி

- வெளிநாட்டு படைத்துறை விற்பனைகள்

- நேரடியான வர்த்தக விற்பனைகள்

- மேலதிக பாதுகாப்பு உதவிகள்

போன்ற உதவிகள் சிறார் படைச் சேர்ப்பை குறிப்பிட்ட நாடுகள் நிறுத்தும் வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home