Friday, April 27, 2007

பல்கலைக்கழக மாணவர்களை இராணுவப் புலனாய்வாளர்களினால் விசாரணை.

வெள்ளி 27-04-2007

வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்கு கப்பலில் வரும் மாணவர்களை தெல்லிப்பளையில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணையின் பின்னரே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர் கப்பலில் வரும் மாணவ, மாணவிகள் காங்கேசன்துறையில் இருந்து கப்பலில் இருந்து இறங்கி தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டதும், அங்குவைத்து யாழ்ப்பாணத்திற்கு வந்தமைக்கான காரணம் கேட்டுப் பதியப்படுகின்றது.

இதன்போது பல்கலைக்கழக கல்விக்காக வந்ததாக தெரிவித்ததும் குறிப்பிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பற்றிய முழு விபரமும் பெறப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home